Home Blog

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

0

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அதிர்ஷ்டம் பெற்றார். இதனையடுத்து, இவர் அஜித், விஜய், சிம்பு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார்.

ஒரு காலத்தில் நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால், இவர்களுடைய காதல் ஏதோ ஒரு காரணத்திற்காக திருமணம் வரை சென்று தடைப்பட்டது.

இது குறித்து நயன்தாராவின் உறவினர்கள் நயன்தாராவிடம் எக்கச்சக்க பணத்தை பிடுங்கிக் கொண்டு பிரபுதேவா ஏமாற்றியதாக குற்றம் சாட்டி பேசினர்.

இதுதொடர்பாக அவர்கள் பேசுகையில், நயன்தாராவை கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, வேறு பெண்ணுடன் பிரபு தேவா நெருக்கம் காட்டுவதால் இந்த பிரிவு வந்ததாக தெரிவித்தனர். நயன்தாரா பிடிவாத குணம் அதிகம் என்று சொல்வதெல்லாம் தவறு. அவள் ஒரு அப்பாவி. யாரையும் எளிதில் நம்பிவிடுவாள். முதலில் சிம்புவிடம் ஏமாந்து நின்றார். பின்னர் பிரபு தேவாவிடம் ஏமாந்து போனாள். நடிகர் சிம்பு வல்லவன் படம் எடுக்கும் போது அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு நயன்தாரா கொடுத்து உதவினார். உதவி வாங்கிக்கொண்டு நயன்தாராவை சிம்பு ஏமாற்றிவிட்டார். இதன் பிறகு, பிரபுதேவாவை நம்பினாள். பிரபுதேவாவும் எங்கேயும் காதல் படத்துக்காகவும் நயன்தாரா பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார். அவர்களுக்கெல்லாம் பணம்தான் முக்கியமாக இருந்ததே தவிர, நயன்தாரா மேல் பாசம் கிடையாது. எல்லா பணத்தையும் ஏமாற்றி வாங்கிவிட்டனர் என்று தெரிவித்தனர்.

இந்த காதல் பிரச்சினையிலிருந்து மீண்டு வந்த நயன்தாரா சினிமாவில் என்ட்ரி கொடுத்து விட்ட இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்களின் அமோக ஆதரவைப் பெற்று நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.

மேலும், இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து குடும்பம், பிள்ளை என தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

0

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்து நட்சத்திர நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவரது நடிப்பு, நடனம், அழகு ரசிகர்களை சுண்டி இழுத்தார். தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், பிரசாந்த், பிரபுதேவா, சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினால், வாலி உட்பட படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

மும்பையில் பிறந்த சிம்ரன், பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் பேசுவார். தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து செய்தார் சிம்ரன். இத்தம்பதிக்கு அதீப் மற்றும் ஆதித் என்ற இரு மகன்கள் உள்ளனர். நெடு ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகி குணசித்திர கதாப்பாத்திரத்திலும், தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் நடித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் மட்டும் 10 விருதுகளை சிம்ரன் வென்றுள்ளார். அதில் 4 பிலிம்பேர் விருதுகள் மற்றும் 9 பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகை சிம்ரனுக்கு திருமணத்திற்கு முன்பு 3 காதல் தோல்விகளை கண்டாராம். முதல் காதல் நடிகர் அப்பாஸ்ஸாம். அடுத்து டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம், இவருக்கு பின்னர் நடிகர் கமல் ஹாசன். இதில் ராஜு சுந்தரம் உடன் நெருக்கமாக பழகி திருமணம் வரை சென்றதாம். ஆனால், பெற்றோர்கள் சம்மதிக்காததால் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனராம். கமலுடன் சிம்ரன் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலிருந்து ஏமாற்றப்பட்டாராம். அப்பாஸை சிம்ரன் ஒருதலையாகத்தான் காதலித்தாராம்.

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

0

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். இவர் இயக்குநரும், நடிகருமான தியாகராஜனின் மகனாவார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ‘வைகாசி பொறந்தாச்சி’ என்ற படத்தன் மூலம் நடிகர் பிரசாந்த் அறிமுகமானார். இதனையடுத்து, திருடா திருடி, பாலுமகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார்.

ரசிகர்கள் இவருக்கு பிளாக் பெல்ட் பிரசாந்த், காதல் இளவரசன் என்று பல பட்டங்களை அவருக்கு சூட்டினர். சண்டை, நடனம், நடிப்பு என எல்லாவற்றிலும் அசத்தினார் நடிகர் பிரசாந்த். ஆண் ரசிகர்களை விட பிரசாந்த்திற்கு பெண் ரசிகைகளே அதிகம்.

ஆனால், சரியான கதைகளை தேர்ந்தெடுக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். மேலும், சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினையால் பல வருடங்களாக இவரை சினிமாத்துறையில் பார்க்க முடியவில்லை.

தற்போது சமூகவலைத்தளங்களில் பிரசாந்த் படத்தின் வெள்ளிவிழாவில் நடிகர் விஜய் அவமானப்பட்டதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் பிரசாந்த் அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சி’ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்த விழா சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு பிரசாந்தை சந்திக்க வேண்டும் என்று விஜய் முயற்சி செய்தாராம். ஆனால் விஜய்யை யாரும் உள்ளே கூட விடவில்லையாம். அந்த ஆதங்கத்தில் ஒரு வெறியோ தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை நச்சரித்து விஜய் நடிகரானார்.

ஆனால், இன்றோ பிரசாந்த் ஆள் அடையாளமே தெரியாமல் மாயமாக, விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

0

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான மிரட்டலான நடிப்பின் மூலம் இந்த ஐந்து படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனங்களை எஸ் கே சூர்யா அவர்கள் கவர்ந்து உள்ளார். அந்த படங்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

2017 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மகேஷ்பாபு அவர்களின் நடிப்பில் உருவான படம் “ஸ்பைடர்”. இப்படத்தில் வில்லனாக எஸ்.கே.சூர்யா அவர்கள் நடித்திருந்தார். இப்படத்தில் எஸ்.கே. சூர்யா அவர்களின் கதாபாத்திரமும் தனித்துவமான நடிப்பும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இரண்டாவதாக அதே 2017 ஆம் ஆண்டில் வெளியான மெர்சல் திரைப்படம். இயக்குனர் அட்லி அவர்களின் இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தில் நடிகர் விஜய் அவர்கள் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். படத்தின் வில்லன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள்தான். தனது மிரட்டலான நடிப்பில் இந்த படத்தில் இருப்பார்.

மூன்றாவதாக 2021 ஆம் ஆண்டு வெளியான “மாநாடு” திரைப்படம். நடிகர் சிம்பு அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது மாநாடு. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் தனுஷ்கோடி என்னும் பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு தான் எஸ்.கே.சூர்யா அவர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்ததாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அடுத்ததாக டான் திரைப்படம் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் உருவான டான் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார். இந்த படத்திலும் நடிப்பில் அவர் மிரட்டி இருப்பார்.

ஐந்தாவது படமாக தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் “மார்க் ஆண்டனி” படம் தான். மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா அவர்களின் தனித்துவமான நடிப்பிற்காக படத்தின் வசூல் பல மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது. எஸ்.கே. சூர்யா அவர்களின் மிரட்டலான நடிப்பால் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!

0

இந்த படங்கள் எல்லாம் நடிகர் ஜெய் நடிக்க வேண்டியது!!? அப்போது மிஸ் பண்ணிட்டு இப்ப அழுது என்ன செய்ய முடியும்!!!

தமிழ் திரையுலகில் எப்படியாவது முன்னுக்கு வந்துவிட வேண்டும் என்று வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஜெய் அவர்களும் ஒருவர். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைவார் என்று பார்த்தால் மீம்ஸ்களிலும் சர்ச்சைகளிலும் சிக்கி பிரபலமாகி இருக்கிறார்.

பல அருமையான திரைப்படங்கள் நடிகர். ஜெய் அவர்களை தேடி வந்தது. அதில் எதாவது ஒன்றை தேர்வு செய்து நடித்திருந்தால் நடிகர் ஜெய் ஜாக்பாட் ஜெய்யாக மாறி இருப்பார். மேலும் கெரியரிலும் செட்டில் ஆகி இருப்பார்.

என்னதான் வில்லன், கதாநாயகன், காமெடி கதாப்பாத்திரம், சீரியஸ் கதாப்பாத்திரம் என்று நடித்தாலும் நடிகர் ஜெய் அவர்களால் சினிமாவில் இன்னும் முன்னேற முடியாமல் இருக்கிறார். அவர் தவறவிட்ட அருமையான படங்களை பற்றி பார்க்கலாம்.

1. சிவா மனசுல சக்தி

நடிகர் ஜீவா, சந்தானம், அனுயா, ஊர்வசி நடிப்பில் இயக்குநர் எம்.ராஜேஸ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் நடிகர் ஜீவா வாழ்க்கையில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது. ரொமேன்டிக் காமெடி திரைப்படமான சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு முதலில் நடிகர் ஜெய் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நடிகர் ஜெய் அவர்கள் அப்பொழுது சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் பிசியாக இருந்ததால் இந்த திரைப்படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஆனால் சிவா மனசுல சக்தி திரைப்படம் நடிகர் ஜீவா அவர்களுக்கு மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.

2. விண்ணைத் தாண்டி வருவாயா

தற்பொழுதும் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிகர்கள் சிலம்பரசன், திரிஷா, ஆண்டனி பாபு, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. நடிகர் சிலம்பரசன் அவர்களுடைய சினிமா வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்கள் இருந்தாலும் விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் முக்கியமான திரைப்படமாக உள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதலில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகர் ஜெய் அவர்களிடம் கதை கூறியுள்ளார். ஆனால் நடிகர் ஜெய் சில காரணங்களை முன்வைத்து அந்த வாய்ப்பை நடிகர் சிலம்பரசனுக்கு பாஸ் செய்தார்.

3. நாடோடிகள்

நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ல் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை கொடுத்தது. இதையடுத்து நாடோடிகள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இயக்குநர் சமுத்திரக்கனி அவர்கள் நடிகர் ஜெய் அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு நடிகர் ஜெய் “ஏற்கனவே நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடித்துவிட்டேன். மீண்டும் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க விரும்பவில்லை” மறுப்பு தெரிவித்தார். இவருடைய இந்த மறுப்பு தமிழ் சினிமாவில் முன்னேற்றம் அடைய வேண்டிய இவருடைய வாழ்க்கைக்கு தடையாக அமைந்தது.

4. ராட்சசன்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் 2018ல் ராட்சசன் திரைப்படம் வெளியானது. ராட்சசன் திரைப்படம் நடிகர் விஷ்ணு விஷால் அவர்களின் வாழ்க்கையில் கம்பேக் திரைப்படமாக அமைந்தது. ராட்சசன் திரைப்படத்தில் நடிக்க முதலில் நடிகர் ஜெய் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் நடிகர் ஜெய் அவர்கள் திரைப்படத்தின் கதை பிடிக்கவில்லை என்று கூறி வாய்ப்பை மிஸ் செய்தார்.

5. போடா போடி

2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் போடா போடி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிலம்பரசன் இருவருக்கும் பெஸ்ட் படமாக மாறியது. ஆனால் இந்த திரைப்படத்தையும் நடிகர் ஜெய் அவர்கள் தவறிவிட்டது அவருடைய சினிமா வாழ்வையே தவறவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த ஐந்து திரைப்படங்களில் எதாவது ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும் நடிகர் ஜெய் அவர்கள் முன்னணி நடிகராக மாறி இருப்பார். ஆனால் சொல்லி வைத்தது போல முக்கியமான திரைப்படங்களை நடிகர் ஜெய் அவர்கள் மிஸ் செய்துவிட்டார். இதனால் இவருடைய சினிமா வாழ்கையும் மிஸ் ஆனது.

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

0

மகளிர் உரிமை தொகை.. மேல்முறையீடு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள்!! கண்டுகொள்ளாத தமிழக அரசு!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உரிமை தொகையாக வழங்கப்படும் என்று ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.அதே போல் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் இது குறித்து மூச்சி விடாத திமுக அரசை பல்வேறு கட்சிகள் விமர்சித்து வந்தது.பல்வேறு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இந்த திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முடிவு செய்தது.இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டு ஜூலை மாதம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.

இரு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு குடும்ப தலைவிகளிடம் இருந்து பூரித்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரேஷன் ஊழியர்கள் பெற்று அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.இந்த பணி முடிந்த நிலையில் மொத்தம் 1.70 லட்சம் பேர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தனர் என்றும் அதில் சுமார் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து சோதனை முயற்சியாக திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் செலுத்தப்பட்டது.பல பெண்கள் தங்களது வங்கி கணக்கிற்கு 1 ரூபாய் வர வில்லை என்று புலம்பினர்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15 அன்று இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் தொடங்கிய நாளிலிருந்தே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் 1 ரூபாய் வரவில்லை என்றாலும் தகுதி பெற்ற பெண்களுக்கு ரூ.1000 கிடைக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.மாதந்தோரும் ரூ.1000 கிடைக்கும் உரிமை தொகை திட்டத்தில் நீங்கள் இணைந்து விட்டீர்களா? இல்லையா? என்ற அதிகாரபூர்வ குறுஞ்செய்தி அந்தந்த மகளிரின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்கள் குறுஞ்செய்தி வந்த அடுத்த 30 நாட்களுக்குள் இ-சேவை மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆனால் இந்த திட்டத்தில் இணைந்து விட்டீர்கள் என்று குறுஞ்செய்தி வந்த பெண்களில் பலருக்கு அவர்களது வங்கி கணக்கில் திமுக அரசு ரூ.1000 செலுத்த வில்லை.அதேபோல் சோதனை முயற்சியாக ரூ.1 வங்கி கணக்கில் போடப்பட்ட பெண்களில் சிலருக்கு இந்த 1000 ரூபாய் பணம் செலுத்தப்பட வில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் வசதி படைத்த விண்ணப்பதாரர்கள் தான் இந்த திட்டத்தில் அதிகம் பயன் பெற்றுள்ளனர் என்று ரூ.1000 பெற தகுதி இருந்தம் இந்த திட்டத்தில் நிராகரிக்கபட்ட பெண்கள் வேதனையையும்,தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்த திட்டத்தின் பலன் ஏழை பெண்களுக்கு சென்று சேரவில்லை என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது.

இந்நிலையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்ததை தொடர்ந்து 1000 கணக்கான பெண்கள் இ-சேவை மையத்தை அணுக தொடங்கி இருக்கின்றனர்.இந்த திட்டத்தில் சேர இறுதி வாய்ப்பு இ-சேவை மையத்தில் மீண்டும் விண்ணப்பிப்பது தான் என்று சொல்லப்படும் நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக உரிமைத்தொகை திட்டத்திற்கு மேல்முறையீடு செய்யும் இணையதளம் முடங்கி இருக்கிறது.

இதனால் கூடி இருக்கும் பெண்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இ-சேவை ஊழியர்கள் முழித்து வருகின்றனர்.மேல்முறையீடு செய்ய பெண்கள் பலர் கால் கடுக்க காத்திருக்கும் நிலையில் இணையதள சேவை முடங்கி இருப்பது கூட தெரியாமல் திமுக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒரு சிலர் பெண்கள் விண்ணப்பிக்க கூடாது என்பதற்காக திமுக அரசு செய்துள்ள சதி செயல் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

0

எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து கூற உதயநிதிக்கு தடை – உயர்நீதிமன்றம் அதிரடி!

தமிழக விளையாட்டுமேம்பட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது சர்ச்சை அமைச்சராக வலம் வருகிறார்.இவர் கூறும் ஆணவக் கருத்துக்கள் அனைவரையும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது.முதலில் இந்து மதத்தையும்,சனாதனத்தையும் ஒழிக்க வேண்டுமென்று கூறி மக்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

மக்கள் பிரதிநியதாக இருக்கும் ஒருவர் இவ்வாறு பொறுப்பற்று,வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று உதயநிதிக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கிய நிலையில் தற்பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று உதயநிதி ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளிட்டார்.

அதில் சனாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொதுச்செயலாளர் தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருந்து தேடி கொண்டிருக்கிறார்.கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டு தாடியின் பின்னால் நீண்ட நாட்கள் ஒளிந்திருக்க முடியாது.அந்த ஆடு காணாமல் போனால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டுமென்று அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உதயநிதியின் இந்த கருத்து தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாககவும்,இதற்காக உதயநிதி தனக்கு மான நஷ்ட ஈடாக 1 கோடியே 10 லட்சம் வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நீதிபதி மஞ்சுளா அமர்வு முன் வந்தது.இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்த கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான விசாரணைக்கு தன்னை யாரும் இதுவரை இதுவரை அழைத்ததில்லை.தனக்கும் இந்த கொடநாடு வழக்கிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.தான் ஆட்சி பொறுப்பில் இருந்த சமயத்தில் இந்த கொடநாடு வழக்கு விசாரணையை நடத்த அனுமதி வழங்கினேன்.அப்படி இருக்கையில் எந்த தவறும் செய்யாத தன்னை இந்த வழக்கில் தொடர்பு படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

தற்பொழுது திமுக தான் ஆட்சி செய்து வருகிறது.அப்படி இருக்கையில் முழுமையான விசாரணையை மேற்கொள்ள அவர்களால் மடியும்.ஆனால் அதை விடுத்துவிட்டு எந்த ஆதாரமும் இன்றி தன் மீது வீண் பழியை போட உதயநிதி முயற்சிக்கிறார்.இவரின் இந்த அவதூறு பேச்சால் மக்கள் மத்தியில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.எனவே உதயநிதி தன்னை பற்றி பேசுவதற்கும்,தன் மீது அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று திரு.எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நீதிபதி மஞ்சுளா அவர்கள் அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் அறிக்கை வெளியிடுவது வழக்கமான ஒன்று என்றாலும் உதயநிதியின் அறிக்கையில் அவதூறு கருத்துக்கள் இருக்கிறது.இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் அறிக்கையில் அவதூறை அனுமதித்தால் மனுதாரருக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்படும்.எனவே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற அவதூறு அறிக்கையை வெளியிட கூடாது.அதேபோல் இந்த மனு மீதான விசாரணை முழுமையாக முடியும் வரை இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதி மனுவிற்கு 2 வாரங்களில் பதில் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

0

கூலித் தொழாலாளியாக மாறிய ராகுல் காந்தி!!! இணையத்தில் புகைப்படங்கள் வைரல்!!!

டெல்லி ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சிவப்பு நிற சட்டையை அணிந்து சுமை தூக்கி செல்லுமாறு உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வாயிலாக வருகின்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார். ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லும் ராகுல் காந்தி அவர்கள் அங்கு இருக்கும் மக்களிடமும் தொழிலாளர்களிடமும் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு வருகின்றார்.

அந்த வகையில் பாரத் ஜோடோ யாத்திரையில் லாரி ஓட்டுநர்களுடன் லாரியில் சென்ற ராகுல் காந்தி அவர்கள் லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மார்கெட் பகுதிகளுக்குள் சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும் மீனவர்களுடன் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்தது, விவசாயிகளுடன் சேர்ந்து நாற்று நடுவது போன்ற செயல்களை செய்து மக்கள் மனதில் ராகுல் காந்தி அவர்கள் இடம் பிடித்து வருகின்றார்.

அதைப் போலவே பல்வேறு கூலித் தொழிலாளர்களுடன் சேர்ந்து அவர்கள் செய்யும் வேலை செய்து கொண்டே கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தி கேட்டு வருகிறார்.

அந்த வகையில் டெல்லி ஆனந்த் விஹார் இரயில் நிலையத்தில் வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ராகுல் காந்தி அநர்களை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இன்று(செப்டம்பர்21) திடீரென்று ராகுல் காந்தி அவர்கள் டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி அவர்கள் கலந்துரையாடினார்.

அப்பொழுது சுமை தூக்கும் தொழிலாளர்கள் அணியும் சிவப்புநிற சட்டையை அணிந்து கொண்டு இரயில் நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரின் பெட்டியை ராகுல் காந்தி அவர்கள் தலையில் வைத்து சுமந்து சென்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

மேலும் ராகுல் காந்தி அவர்களுடன் கலந்துரையாடிய சுமைதுக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ராகுல் காந்தி அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

0

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா! வரவேற்பும்.. விமர்சனமும்.. என்ன சொல்கிறார் அமித்ஷா!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 18ல் துவங்கி வெள்ளி அதாவது செப்டம்பர் 22 வரை நடைபெற இருக்கிறது.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு கூட்டத்தில் முதல் மசோதாவாக லோக்சபா மற்றும் சட்டசபையில் பெண்களின் உரிமையை நிலைநாட்ட 33% இடஒதுக்கீடு குறித்த மசோதா நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய சட்ட அமைச்சர் ‘அர்ஜுன் ராம் மேக்வால்’ இந்த சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்டத்திற்கு ‘நாரி ஷக்தி வந்தன் அதினியம்’ (Nari Shakti Vandan Adhiniyam) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு நாட்டு மக்களிடையே சிறப்பான ஆதரவு கிடைத்து வருகிறது.

கடந்த 1996 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவின்றி பலமுறை தொலைவியுற்ற நிலையில் தற்பொழுது நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளின் ஆதரவால் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது.அதாவது இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும்,எதிராக 2 வாக்குகளும் பதிவாகி நிறைவேற்றப் பட்டுள்ளது.இந்நிலையில் இந்த மசோதா தற்பொழுது நிறைவேற்றப் பட்டாலும் வரும் 2029 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் அமலுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.

நாட்டில் உள்ள தொகுதிகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் தான் இந்த மசோதா சட்டமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைத்து வரும் அதேவேளையில் விமர்சனமும் எழுந்து இருக்கிறது.இந்த மசோதா இப்பொழுது நிறைவேற்றப்பட காரணம் வரவுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தான்.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான் பாஜக அரசு இதனை கொண்டு வந்துள்ளது.

எத்தனையோ மசோதாக்களை அறிமுகப்படுத்திஅவை உடனடியாக சட்டமாக இயற்றப்பட்டுள்ள நிலையில் இந்த 33% இட ஒதுக்கீடு மசோதாவை மட்டும் சட்டமாக இயற்ற ஏன் அத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து பேசி இருக்கிறார்.இந்த இடஒதுக்கீடு மசோதா தேர்தல் லாபத்திற்காக கொண்டு வரப்பட வில்லை.பெண்களுக்கு உரிமை மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய அவர் ஓபிசி மற்றும் இஸ்லாமிய பெண்களுக்கு இட ஒதுக்கீட்டினால் பயன் இல்லை என்று சிலர் மசோதாவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஆதரவு கிடைக்காவிட்டால் எப்படி நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!!

0

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளம்!!! மத்திய அரசில் அருமையான வேலை வாய்ப்பு இதோ!!!

மாதம் 140000 ரூபாய் வரை சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்ன வேலை என்ன தகுதி எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த தகவலை பி.டி.எல் என்று அழைக்கப்படும் பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்குகின்றது. பாரத் டைனமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கும் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இந்த நிறுவனத்தில் தற்பொழுது காலியாக இருக்கும் 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் செப்டம்பர் 21ம் தேதி அல்லது அதற்கு முன்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வேலை வாய்ப்பு பற்றிய மற்ற விவரங்கள்…

நிறுவனத்தின் பெயர் : பாரத் டைனமிக்கல் லிமிடெட்

பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெய்னி மற்றும் வெல்ஃபேர் ஆபிசர் மற்றும் ஜே. எம் பப்ளிக் ரிலேசன்

மெத்த காலிப்பணியிடங்கள் : 45

கல்வித் தகுதி : MS Physics, MS Applied Physics, Bachelor Degree In Engineering அல்லது Bachelor degree in Technology

மேனேஜ்மென்ட் டிரெய்னி பதவிக்கான வயது வரம்பு : குறைந்தபட்சம் 27 வயதாகவும் அதிகபட்சம் 32 வயதாகவும் இருக்க வேண்டும்.

சம்பள விவரம் :

மேனேஜ்மென்ட் டிரெய்னி – 40000 ரூபாய் முதல் 140000 ரூபாய் வரை

வெல்ஃபேர் ஆபிசர் மற்றும் ஜே.எம் : 30000 ரூபாய் முதல் 120000 வரை

தேர்வு செய்யும் முறை :

மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் செப்டம்பர் 21ம் தேதிக்குள் https://bdl-india.in என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.