வகுப்புகளை தொடங்கலாம்! பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0
224

தமிழ்நாட்டில் நடைபெற்ற பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையிலும் தட்டுப்பாடு காரணமாக, பள்ளிகள் கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கு உத்தரவிட்டிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை .அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த கல்வி வருடம் தொடங்கி விட்ட சூழ்நிலையில், பதினோராம் வகுப்புக்கான இணையதள வகுப்புகளை ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கின்றது. அதோடு குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து பதினோராம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

Previous articleஅரசு ஊழியர்களுக்கு முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு!
Next articleஅம்மா என்று கூச்சலிட சிலை போல் நின்ற மகளை பார்த்து அதிர்ந்து போன சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here