அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீடு திரும்பியதால் அதிர்ச்சி !!

0
56

கடந்த பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டு,அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் ஏழு மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரை, இரண்டு சகோதரர் கொலை செய்து விட்டதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர். கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கூலித்தொழிலாளியின் உடலை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டதாக கூறிய கூலித் தொழிலாளி வீடு திரும்பி வந்துள்ளார்.

கொரோனா என்பதால் கடந்த 5 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லை என்றும் அதனால் தற்போது வீடு வந்ததாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் காவல்துறையினர் கூலித்தொழிலாளியின் சகோதரர்கள் இருவரையும் அடித்து ஒப்புக் கொள்ள வைத்தது தெரியவந்தது. இதனால் போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அந்த உடலைத் தேடி மீண்டும் எடுத்து பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

author avatar
Parthipan K