குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்!

0
103

குறட்டை விட்டு தூங்கிய தம்பதியினர்! அலேக்காக பீரோவையே தூக்கிய திருடர்கள்!

பல வழிமுறைகளில் திருட்டு நடப்பது வழக்கம் தான். வீட்டுக்குள் புகுந்து திருடுவது ஒருபுறமிருந்தாலும், டிஜிட்டல் முறைகளிலும் திருட்டு நடைபெற்று தான் வருகிறது. தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதிய முறையில் திருட்டு நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள சமுத்திரம் பகுதியில் வசித்து வருபவர் தான் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா. இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் டிஎன்பிஎல் பொதுத்துறை நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

அவரது மனைவி ஜெயப்பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் தகுதி வாய்ந்த வேலையில் இருப்பதால் இவர்களது வீட்டை திருடர்கள் நோட்டமிட்டு வந்துள்ளனர்.இவர்கள் வழக்கம் போல் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்ளனர். தங்களது அன்றாட வேலையை முடித்துவிட்டு இரவு அசந்து உறங்கிக் உள்ளனர். இவர்கள் அசந்து உறங்கிய நிலையில் திருடர்கள் வீட்டில் புகுந்துள்ளனர். இவர்கள் உறங்கும் அறையை மூடிவிட்டு, பீரோ இருக்கும் அறைக்கு சென்றுள்ளனர்.

பீரோவை உடைத்து பணம் நகையை எடுத்துக் கொள்ளாமல், திருடர்கள் பீரோவை தூக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் காட்டிற்கு அந்த பீரோவை எடுத்து சென்றுள்ளனர். பிறகு பீரோவை உடைத்து அதில் இருந்த 10 சவரன் நகை 3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பிள்ளையார் ரூ 1000 பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை திருடி உள்ளனர். இருவரும் தெரியாத அசந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்ததும் பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணை செய்து வருகின்றனர்.