பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!!

0
89

பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சூப்பர் நியூஸ்! இவர்களுக்கு  நாளை முதல் விடுமுறை!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாகிது பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளதால் 24 ஆம் தேதி அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கலெக்டர் அறிவித்தார்.

இத்திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகவும் அதனை ஈடுசெய்யும் வகையில்  ஜூலை 2ஆம் தேதி அன்று சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளில் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவலர்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று ராமநாதபுரம் மாவட்டம் கலெக்டர் ஜானிடம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அறிவிப்பை ஏற்று அதனடிப்படையில் செயல்படுமாறு கூறியுள்ளார்.

author avatar
Parthipan K