தமிழகம் முழுவதும் காவல்துறை உஷார்நிலை!

0
233

தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவர சோதனையில் இறங்கி உள்ளனர், இலங்கை வழியாக 6 தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் தமிழகத்திற்கு நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‌‍‌‌ ‌‍‍ கோவையில் தீவீரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருப்பதால் அந்த மாவட்டம் முழுவதும் தீவிர காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிகிறது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம், வேளாங்கண்ணி ஆலய திருவிழா போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகளை சீர்குலைக்க தீவீரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது! ‌ இதனையடுத்து கோவை முழுவதும் மாநகர காவல்துறையினர் அதிரடியாக பல சோதனை சாவடிகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகபடும்படி இருக்கும் நபர்கள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர்! ‌ காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உளவுத்துறை தெரிவித்ததை தொடர்ந்து தீவிரவாதிகள் தங்கள் கோழைத்தனத்தை நிரூபிக்க தமிழகம் பக்கம் திரும்பி உள்ளதாக தெரிகிறது!

Previous articleஒரு தமிழரை தெலுங்கராக அடையாளப்படுத்துவதா? கொதித்தெழுந்த தமிழ் ஆர்வலர்கள்
Next articleதிராவிட அரசியல் இது தானா? திமுகவை பட்டியலிட்டு விமர்சிக்கும் பாஜகவின் ஹெச்.ராஜா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here