பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

0
89
The atrocity that took place in the bungalow! The ability to reach the aspirants! Shocking incidents that came out again!
The atrocity that took place in the bungalow! The ability to reach the aspirants! Shocking incidents that came out again!

பங்களாவில் நடைபெற்ற கொடூரம்! ஆசை படுவோரை எல்லாம் அடையும் சாமர்த்தியம்! மீண்டும் வெளிவந்த அதிர்ச்சி சம்பவங்கள்!

உலகம் எங்குதான் போகிறது? ஒரு பள்ளியில் வெளிவந்த பாலியல் புகார்களை தொடர்ந்து, விளையாட்டு பயிற்சியாளர், அமைச்சர்கள், நடிகர்கள், என பலரின் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பெண்களை என்னதான் நினைக்கிறார்கள் அவர்கள் என்று அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டும், கடுமையான சட்டங்களை போட்டும் மட்டுமே அடக்க முடியும், என்பது அனைவரின் மனதிலும் தோன்றும் எண்ணமாக உள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்து பல பேரின் உண்மை முகங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. இந்நிலையில், ஆன்மீகத்தின் போர்வையில் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.

ஆம், ஒரு பள்ளியில் இப்படியெல்லாம் நடக்கிறதா? என்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் சிவ சங்கர் பாபா. சுஷில் ஹரி பள்ளி, சென்னையை அடுத்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை அருகே சுமார் 60 ஏக்கரில் விஸ்தாரமாக அமைந்துள்ளது. இது வெறும் பள்ளி நிறுவனமாக மட்டும் இல்லாமல் ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட கட்டமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் நிர்வாக தலைவர்தான் சிவசங்கர் பாபா, கடவுளுக்காக வந்தேன் என்றும், கடவுளாக வந்தேன் என்றும் கூறிக்கொள்ளும் இவர் மீது முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பாலியல் புகார் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பிரைமரி பெண் குழந்தைகளும் அடக்கம். பள்ளி வளாகத்திலேயே இவருக்கென்று ஒரு தனி சொகுசு பங்களா உள்ளது. அதில் அவர் ஆசைப்படும் பள்ளி மாணவிகளை அந்த பங்களாக்குள் அழைத்து வந்து விலையுயர்ந்த சாக்லேட்டுகள், மது பானங்களை காட்டி ஆசையை தூண்டி, இவர் சம்மதிக்கும் மாணவிகள், தப்ப நினைக்கும் மாணவிகள் என அனைவரையும் சிறை பிடித்து க்ரூப் செக்சில் ஈடுபடுவார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

பிரபல தனியார் பள்ளி நிர்வாக இயக்குனர் சிவ சங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி மாணவிகளை கொண்டு வந்துவிடும் செயல்களில் அந்த பள்ளியில் சில ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது. அப்படி ஒருநாள் பள்ளி மாணவியை சிவ சங்கர் கட்டாயப்படுத்தி பங்களாக்குள் வைத்து பலாத்காரம் செய்ததை அடுத்து, அந்த மாணவி அழுதுகொண்டே வெளியே வருவதை சக மாணவர் ஒருவர் பார்த்துள்ளார்.

அந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வரவே பள்ளியை இரண்டு மாதம் இழுத்து மூடியுள்ளனர். அந்த மாணவன் விஷயத்தை வெளியே சொல்லி விடுவானோ என்று பயந்த பள்ளி நிர்வாகம் மாணவனை ஒரு வழி ஆக்கியுள்ளது.

தேர்வுகள் எழுதவிடாமல், மாணவன் மீது பொய்யான புகாரை கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மாணவனின் தாயார் இதுகுறித்து கேட்க வந்த போது, அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு வர வழைத்துள்ளார் சிவ சங்கர் பாபா. அப்போது மாணவனை குறித்து பேசாமல், பங்களாவில் உள்ள ஆடம்பர பொருட்களை காட்டி அந்த மாணவனின் அம்மாவிற்கும் ஆசையை தூண்டியுள்ளார்.

அதுவரை பள்ளி மாணவிகளை சீரழித்து வந்தவர் மாணவனின் தாய் மீது ஆசை பட்டு அவரை உறவுக்கு இணங்க வைக்க முயற்சித்துள்ளார். இதுபோல பல புகார்கள் சிவசங்கர் பாபா மீது குவிந்து வருகின்றன. இந்த பிரச்சினையை குறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல ஆதாரங்களை தர தயார் என்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

இவரை போன்றோர்களை அரசு என்னதான் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த செய்தியை பார்க்கும்போது சிலவருடங்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் கதையை போலவே தெரிகிறதல்லவா? சினிமா பார்த்து இவர்கள் இப்படி இருக்கிறார்களா? அல்லது இவர்களை பார்த்து படம் எடுக்கிறார்களா? என்பது யாருக்கு தெரியும்.