தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

0
83

தங்கையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்! கர்ப்பமான கொடூர சம்பவம்!!

உடன் பிறந்த தங்கையை சொந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த வேதனையான சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதனையடுத்து தங்கை என்று கூட பார்க்காமல் அவரது அண்ணனே அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். அந்த வகையில் 3 மாத கர்ப்பமாக இருந்த அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனைக்கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.