கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

0
170
The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!
The cruel man invited the women who come to his shop to have an abusive relationship!! It all depends on the wife who got angry!!

  கடைக்கு வரும் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த கொடூரன்!! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த மனைவி !! 

தன்னுடைய கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை தவறான பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்ததாக கணவர் மீது மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி. இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணி சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதேபகுதியில் தையற்கடை நடத்தி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் திருமணி தனது மனைவியின் கடைக்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளார். மேலும் தனது மனைவியிடம் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவுக்கு அனுப்பி வைக்குமாறு கட்டாயப் படுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது மனைவி மறுக்கவே கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

மேலும் திருமணியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. இதையடுத்து சம்பவத்தன்றும் மனைவியை பெண்களை உறவுக்கு அனுப்புமாறு கூறி அடித்துள்ளார். அவர் மறுக்கவே அவரை கட்டையால் தாக்கியுள்ளார். மேலும் அவரின் மூத்த மகன் தடுக்கவே அவரையும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் காயம் அடைந்த திருமணியின் மகன் மற்றும் மனைவி அவர் மீது போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் திருமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தப்பான செயலில் ஈடுபட்ட கணவன் மீது  மனைவியே புகார் கூறியது பரபரப்பை ஏற்ப்படுத்தியது.