மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

0
31

மாணவி ஆடிய டபுள் கேம்.. இரண்டு உயிர்கள் பறிபோனது தான் மிச்சம்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சாய்குமார்(23),சூரிய பிரகாஷ் (25) என்பவர்களை ஒரே சமயத்தில் காதலித்து

வந்துள்ளார்.சாய்குமார்,சூரிய பிரகாஷ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால்
ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை அம்மாணவி சந்திப்பது வாடிக்கையான ஒன்றாக இருந்துள்ளது.

அந்த இளைஞர்களும் மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லி கொள்ளவில்லை.இதனை சாதகமாக பயன்படுத்தி தனது டபுள் கேம் ஆட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்த மாணவி இருவருடனும் உல்லாசமாக சுற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாய்குமார் மற்றும் அந்த மாணவி அப்பகுதியில் லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர்.இதை தொடர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக சாய்குமார் மாணவியின் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறார்.

அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து இருக்கிறார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த விவகாரம் மாணவியின் மற்றொரு காதலனான சூரிய பிரகாஷ்க்கு தெரிய வந்துள்ளது.இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த அவர் சாய்குமாரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

இதன் பின்னர் மாணவியின் முக்கோண காதல் இருவருக்கும் தெரிய வந்ததையடுத்து மாணவியிடம் இது குறித்து கேட்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.வீட்டில் மாணவியின் பெற்றோர்,உறவினர்கள் இருந்த நிலையில் அவர்களின் முன்னிலையில் மாணவியின் நடத்தையை இருவரும் புட்டு புட்டு வைத்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவியின் இம்முடிவால் அதிர்ந்த பெற்றோர் காவல் நிலையத்தில் சாய்குமார் மற்றும் சூரிய பிரகாஷ் மீது புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் தம்மை கைது செய்து விடுவார்களோ என்று பயந்து சூரிய பிரகாஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் மாணவிக்கு தாலி கட்டிய சாய்குமார் மீது இவ்வழக்கு பாய்ந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவியின் முக்கோண காதலால் இரண்டு உயிர்கள் பறிபோகி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.