மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

0
163
#image_title

மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் எதிரொலி! இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உயர் கல்வி கற்பதற்காக 700 மாணவர்கள் கனடா சென்றனர். அங்கு படிக்க செல்ல ஏற்பாடு செய்த ஜலந்தரை சேர்ந்த ஏஜென்ட் அந்த மாணவர்களிடம் போலி சேர்க்கை கடிதங்களையும் ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.

 

முதலில் இதை அறியாத மாணவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு ஏஜெண்ட் ஏமாற்றுவதை மாணவர்கள் அறிந்து கொண்டனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த 700 மாணவர்களையும் இந்தியாவிற்கு அழைத்து சொல்ல டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ என்று அழைக்கப்படுகின்ற கனடா எல்லை பாதுகாப்பு முகமை ஏற்பாடு செய்தது. இந்த 700 மாணவர்களும் இந்தியா அழைத்துச் செல்வதற்கான நோட்டிஸ்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை அறிந்த மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்திய மத்திய அரசு இந்த பிரச்சனைக்கு ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சனையை எடுத்து கூறியுள்ளார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் அவர்களும் கடந்த ஏப்ரல் ம்தம் கனடா சென்ற போது இந்த பிரச்சனையை குறித்து அந்த நாட்டின் அரசிடம் பேசியுள்ளார். அடுத்ததாக இது தொடர்பாக 700 இந்திய மாணவர்களிடம் கனடாவில் இருக்கும் இந்திய தூதரகம் சந்தித்து பேசியது. மாணவர்கள் பக்கம் தவறு இல்லை என்பதால் மனித நேயம் அடிப்படையில் கனடா அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது.

 

கனடாவில் உள்ள எம்.பிகளும் கட்சி வித்தியாசம் இன்றி இந்திய மாணவர்கள் பக்கம் நின்றனர். இதைத் தொடர்ந்து கனடா நாட்டின் குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர் அவர்கள் கனடா நாட்டில் நிச்சியமற்ற தன்மையை சந்தித்து வரும் இந்திய மாணவர்களின் பிரச்சனையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கின்றது” என்று தெரிவித்தார். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து 700 மாணவர்களை இந்தியா அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.