தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

0
101
The government express bus climbed on the worker's head! A lot of excitement in the area!
The government express bus climbed on the worker's head! A lot of excitement in the area!

தொழிலாளியின் தலை மீது ஏறிய அரசு விரைவு பேருந்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம் தோப்பூர்  பகுதியை  சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது வயது 47. இவர் சலவைத் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று மாலை சேலத்தில் இருந்து தோப்பூர் குமியப்பட்டியை நோக்கி அவரது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தீவட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. அதில் கோவிந்தராஜ் கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின்  பின் சக்கரம் கோவிந்தராஜின் தலைமீது ஏறி இறங்கியது. சம்பவ  இடத்திலேயே தலை நசுங்கி கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K