இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

0
84
The man who had two nieces shouted at home!
The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் உள்ளனர்.

இந்த இரு மனைவிகளும் ஒரே இடத்தில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது.இது தவிர,பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தை பாகம் பிரித்துக் கொடுப்பதில் இரண்டாவது மனைவியின் மகன்களுக்கும்,மூத்த மனைவியின் மகன்களுக்கும் பிரச்சனையை இருந்து வந்துள்ளது.இதற்கிடையே செவ்வாய்கிழமை மூத்த மனைவியின் மகன் சின்னத்தம்பி வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.அப்போது அவர் தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகன்கள் முதல் மனைவியின் மகனான சினத்தம்பியை வழி மறைத்து வம்பு செய்துள்ளனர்.

இருவருக்கிடையே அதிக அளவு வாக்குவாதம் நடந்து இரண்டாவது மனைவியின் மகன்கள்,முதல் மனைவியின் மகனான சின்னத்தம்பியை சரமாரியாக தாக்கினர்.தாக்கும் போது அவரின் கழுத்து மற்றும் கை கால்களை  கத்தியால் வெட்டியுள்ளனர்.அதன்பின் இவர் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதுக்குறித்து கருமந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது,போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றினர்.பின் அவரது சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.பொதுவாக உள்ள 85 சென்ட் நிலத்தை பிரித்து கொடுப்பதில் சின்னத்தம்பி தடையாக இருந்ததால் இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகன்கள் ஆகிய மூவரும் திட்டம்போட்டு முதல் மனைவியின் மகனான சின்னத்தம்பியை கொலை செய்துள்ளனர்.இவர்கள் மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதன்பின் தலைமறைவாக உள்ள இரண்டாவது மனைவி மற்றும் மகன்களை போலீசார்  தேடி வருகின்றனர்.