பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..

0
91
The mother put heat on the genitals ..! The adoptive psycho who brutally tortured the girl !..
The mother put heat on the genitals ..! The adoptive psycho who brutally tortured the girl !..

பிறப்புறுப்பில்  சூடு வைத்த தாய் ..!சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த வளர்ப்பு சைக்கோ !..

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பல குடும்பங்கள் வசித்து வருகிறது.அவ்வூரில் ஒரு பெண்மணிக்கு பல வருடம் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் ஒரு சிறுமியை தத்தெடுத்து வளத்தினார்.

ஒன்பது வயதான அந்த சிறுமி இரவில் தூங்கும் போது தனது படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த வளர்ப்புத்தாய் அந்த குழந்தையை அடித்து உதைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமிக்கு பிறப்புறுப்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டுக்காரர்களுக்கு தெரியவந்தது.பின்னர் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து இச்செய்தியை காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் வளர்ப்பு தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் நல கமிட்டி தலைவர் தெரிவிக்கையில் அந்த சிறுமியின் தலைமுடி பிடுங்கப்பட்டுள்ளதாகவும் உடல் முழுக்க நகக்கீறல்  தடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனசாட்சி இல்லாத அந்த தாயின் செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் வளர்ப்பு தாயை தூக்கில் இடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

author avatar
Parthipan K