பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

0
73
The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!
The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22).இவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாததால் அவருடைய அத்தை மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.இவர் மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர் என கூறப்படுகின்றது. அதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ஸ்வேதா தியாகராஜனிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் தியாகராஜன் ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்

.இந்நிலையில் ஸ்வேதா வீட்டில் தனிமையில் இருந்ததை அறிந்த தியாகராஜன் அவரை சந்தித்து உல்லாசமாக இருக்க முயற்சி செய்துள்ளார்.அதற்கு ஸ்வேதா தன்னை திருமணம் செய்து கொல்ல வேண்டும் என தியாகராஜன் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.அப்போது திடீரென ஸ்வேதாவின் அத்தை ,மாமா மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் புகுந்து  தியாகரஜனை அடித்து ஸ்வேதாவுடன் திருமணம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து தியாகரஜனை மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் தியாகராஜன் பல பெண்களை காதல் வலையில் விழ வைத்து உல்லாசமாக இருந்து அதனை வீடியோ மற்றும் போட்டோ போன்றவைகளாக வைத்து கொண்டு பெண்களை மிரட்டி வந்துள்ளது தெரியவந்தது.அதே போல ஸ்வேதாவையும் மிரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K