நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

0
125
#image_title

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம்.

கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜய் என்ற மற்றொரு நகைபட்டறை ஊழியர் தப்பி ஓட்டம்.படுகாயம் அடைந்த நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் ,சக்ஜத் இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
Savitha