சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

0
45
#image_title

சாஸ்திரப்படி பெண்கள் செய்யக் கூடாத விஷயங்கள் இவை..!!

**பெண்கள் தலை சீவிவிட்டு சீப்பில் உள்ள முடியை தரையில் போடக் கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

**பெண்கள் வீட்டில் சத்தமிட்டு பேசக் கூடாது.

**பெண்கள் நகங்களை வெட்டி வீட்டின் உள்ளே போடக்கூடாது. இதனால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

**பெண்கள் தலையில் இரண்டு கைகளை வைத்தபடி உட்காரக் கூடாது. இது வீட்டிற்கு நல்லதல்ல.

**கோயிலுக்கு செல்லும் பெண்கள் கோயிலில் வேண்டாத விஷயங்களை பேசக் கூடாது.

**பெண்கள் கோயிலில் கொடுக்கப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

**மாதவிடாய் காலத்தில் பெண்கள் பூஜை அறைக்குள் செல்லக் கூடாது.

**தலைக்கு குளித்து விட்டு முடியில் இருந்து நீர் சொட்ட சொட்ட வீட்டிற்குள் வலம் வரக் கூடாது.

**பெண்கள் வீட்டில் அநாகரிக சொற்களை பேசக் கூடாது.

**வீட்டில் பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக் கூடாது.

**பெண்கள் முந்தானையை தொங்க விட்ட படி நடக்கக் கூடாது.

**பெண்கள் கடவுளை வணங்கும் போது பின்னங்கால்கள் சேர்ந்திருக்கும் படி தான் நமஸ்காரம் செய்ய வேண்டும்.