டெங்கு முதல் அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் குட் பாய் சொல்லும் பானம் இது!

0
154
#image_title

டெங்கு முதல் அனைத்து வைரஸ் காய்ச்சலுக்கும் குட் பாய் சொல்லும் பானம் இது!

இன்றிய உலகில் நோய் கிருமிகளுக்கு மத்தியில் மனித வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதிலும் வைரஸ் காய்ச்சல் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.இந்த வைரஸ் காய்ச்சல் உயிரை குடிக்க கூடிய ஆபத்து நிறைந்தவை என்பதினால் அதை குணப்படுத்திக் கொள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுவது நல்லது.

கொத்தமல்லி இலை
வெற்றிலை
புதினா
வாழைத்தண்டு
கருவேப்பிலை

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அதன் பிறகு 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையை நறுக்கி அதில் சேர்க்கவும்.

பின்னர் பத்து வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி கிள்ளி போட்டுக் கொள்ளவும்.

தொடர்ந்து சிறிது புதினா மற்றும் கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

இறுதியாக சேர்க்க வேண்டிய பொருள் வாழைத்தண்டு ஆகும். இந்த வாழைத்தண்டை நறுக்கிய துண்டுகளாக சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். தண்ணீர் சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்திற்கு வடிகட்டி ஒரு நாள் முழுவதும் இந்த நீரை குடிக்கவும்.

தண்ணீர் தாகம் எடுத்தால் கூட இந்த நீரை குடிக்கவும். இந்த பானம் உடலில் உள்ள தொற்று கிருமிகளை அழித்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது.