சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிப்பு!

0
189

சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. அந்த வகையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று இரவு 9 மணி வரை சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று முதல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயங்கும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous articleபிரபல நடிகருடைய பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்!
Next articleநீட் தேர்வுக்கு எதிராக உங்கள் குரல் அழுத்தமாக ஓங்கி ஒலிக்கட்டும்:! மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ஹேஸ்டேக்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here