ரயிலில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி?

0
212

நாகபட்டினம் மாவட்டம் சேத்தூர் பருத்திகுடியை சேர்ந்த சத்தியசுந்தரம் கட்டிட தொழிலாளியானா இவர் கேரளா மாநிலம் கோழிகோட்டில் இருந்து ஈரோடு வருவதற்காக மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் gentral பெட்டியில் பயணித்தார்.

பொது பெட்டி என்பதால் கூட்டம் நிரம்பி வழிந்தது இதனால் சத்திய சுந்தரம் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார். ரெயில் பெருந்துறை- தொட்டிபாளையம் இடையே நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில் இருந்த அவர் எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.

இதில் அவரது வலது கை மற்றும் வலது கால் துண்டானது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Previous articleஎன்னை காதலித்து ஏமாற்றியவர் நடிகர்-அரசியல்வாதியா? ஆண்ட்ரியா அதிரடி பேட்டி!
Next articleகிபி 5070ஆம் ஆண்டு வரை என்னென்ன நடக்கும்: கண்பார்வை இல்லாத பாபாவின் கணிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here