தமிழகத்தில் கன மழை பெய்ய இருக்கும் இரண்டு மாவட்டங்கள்!

0
67

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த தற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி போன்ற மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் சேலம், தருமபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதோடு சென்னை, திருவள்ளூர், போன்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் 16ஆம் தேதி அதாவது நாளையும், நாளை மறுநாளும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற நீலகிரி ,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி தென்காசி, போன்ற மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.