நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

0
245
#image_title

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மூன்று பொருட்கள் போதும்!

இந்த காலத்தில் தலைமுறை நோயாக வரும் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மூன்று போட்டிகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் தீர்க்க முடியாத நோய்களில் சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயும் ஒன்றாக இருக்கின்றது. ஒரு சில சமயங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட இந்த நீரிழிவு நோய் இருக்கின்றது. மேலும் 40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இந்த நெயில் பாதிப்பு அடைகின்றனர்.

இந்த சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு என்று இன்று வரை மருந்து ஒன்றும் இல்லை. ஒரு முறை சர்க்கரை நோய் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள மருந்து மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை எடுத்துக் கொள்வது இன்றியமையாது.

ஒரு சிலர் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் இருக்கும் பொருட்களை வைத்து மருந்து தயார். செய்து பயன்படுத்தலாம். இதனால் சர்க்கரை நோய் வேகமாக கட்டுக்குள் வரும். இந்த பதிவில் சர்க்கரை நோயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வரும் மூன்று போட்டிகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

சர்க்கரை நோயை வேகமாக குறைக்கும் மூன்று பொருட்கள்…

* கற்றாழை ஜெல்
* வேப்பிலை
* சீதாப்பழ இலை

* கற்றாழை ஜெல் சர்க்கரை நோயை குறைப்பதற்கும் கட்டுக்குள் வைப்பதற்கும் முக்கியமான பொருளாக இருக்கின்றது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜெல்லை சாப்பிட வேண்டும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது அவர்களுக்கு தேவையான இன்சுலின் அதிகமாக சுரக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை தானாகவே கட்டுப்படுத்தப்படும்.

* வேப்பிலை ஒரு சிறப்பான மருந்து என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த வேப்பிலை அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்தாக பயன்படுகின்றது. அந்த வகையில் வேப்பிலை சர்க்கரை நோய்க்கும் சிறந்த மருந்தாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கலாம்.

* சீதாப்பழ மரத்தின் இலைகளும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்தாக பயன்படுகின்றது. சீதா பழத்தின் இலைகளில் சர்க்கரை நோய் எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருக்கின்றது. சீதா பழ மரத்தின் இலைகளை நாம் மருந்தாக பயன்படுத்தும் பொழுது கணையத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகின்றது.