குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!

0
165
#image_title
குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு தரும் கல்யாண முருங்கை!!! இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
கல்யாண  முருங்கை என்னும் செடி குழந்தையின்மை பிரச்சனை முதல் பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மருந்தாக உள்ளது. குழந்தையின்மை பிரச்சனைக்கு இதை எவ்வாறு. பயன்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இந்த கல்யாண முருங்கை செடியை யாரும் வீட்டில் தனியாக வளர்ப்பது கிடையாது. விவசாய நிலங்களில், வேலி ஓரங்களில் வளர்ந்து இருக்கும். இதன் இலைகள் மட்டும் அல்ல. இதன் பூக்கள், பட்டைகள், வேர்கள் முதலிய அனைத்தும் மருத்துவ குணம் உள்ளது. கல்யாண முருங்கையை உடல் பருமன் குறைக்கவும் பயன்படுத்தலாம். கல்யாண முருங்கை செடியின் இலையை அரைத்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். இந்த கல்யாண முருங்கையை குழந்தையின்மை பிரச்சனைக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
குழந்தையின்மை பிரச்சனையை போக்க…
குழந்தையின்மை பிரச்சனையை குணப்படுத்த இந்த கல்யாண முருங்கை செடியின் இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கல்யாண முருங்கை இலை சாற்றை பெண்கள் தினமும் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் குறைகள் நீங்கும். இந்த கல்யாண முருங்கை பூவுடன் 4 குறுமிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் கல்யாண முருங்கை இலையை கசக்கி பிழிந்து அதன் சாறு எடுத்துக் கொள்ளலாம் வேண்டும். இந்த சாற்றை பெண்கள் மாதவிடாய் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னரும் மாதவிடாய் முடிந்த பிறகு மூன்று நாளும் என்று மூன்று. மாதங்கள் குடித்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் குழந்தையின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும்.
மேலும் அதே போல குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பு குறைவாக இருக்கும் பொழுது கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை  இருக்கும் பெண்கள் இந்த கல்யாண முருங்கை இலையை சின்ன வெங்காயம், தேங்காய் துருவல், நெய் சேர்த்து கீரைப் பொறியல் போல செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சீர் ஆகும்.