வாசலில் எதற்காக உப்பு வைப்பர்?!! ஜோதிடர் கூறிய பதில்!!

0
124

ஜோதிருடைய பதில்:

வாசலில் ஏன் உப்பு வைப்பர்?

வாசலில் உப்பு வைப்பது தவறான செயல் ஆகும். தெய்வீகமான எந்த ஒரு பொருளையும் காலில் மிதிபடும் வண்ணம் வைப்பது நன்மையை அளிக்காது.

சூரிய புத்தியானது ராகு திசையில் நடைபெற்றால் என்ன பலன் கிடைக்கும்?

சூரியன் பலம் பெற்று இருந்தால் சாதகமான சூழ்நிலைகள், அரசு வழியில் ஏற்படும். மேலும், மனதில் புதுவிதமான துணிச்சல்கள் உண்டாகும்.

ராகு மிதுன ராசியில் இருந்தால் என்ன பலன்?

அவர்கள் மென்மையான குணநலன்களை உடையவர்கள். சிரிப்பு மற்றும் பேச்சால் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

வெள்ளம் வருவது போல கனவு கண்டால் என்ன ஆகும்?

இது போல கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

உத்திர நட்சத்திரம் இருப்பவர்களின் குணநலன்கள் எவ்வாறு இருக்கும்?

அவர்கள் மிகவும் இனிமையாக பேசக்கூடியவர்கள். மேலும் அதன் மூலம் அனைவரையும் கவரக் கூடியவர்கள்.

சனியானது ரிஷப ராசியில் இருந்தால் என்ன நடக்கும்?

மிகவும் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள் ஆவார். மேலும், எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள்.

சுக்கிரன் மேஷ ராசியில் இருந்தால் என்ன பலன்?

அவ்வாறு இருந்தால் வாழ்க்கைத்துணைவர் மீது அன்பும், பாசமும் உடையவர்களாக இருப்பர். அது மட்டும் இல்லாமல் ஏற்ற, இறக்கமான கல்வி நிலைகளை உடையவர்களாக இருப்பர்.

ராகுவின் திசையில் புதன் புத்தியானது நடைபெற்றால் என்ன விதமான பலன் கிடைக்கும்?

இவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் மிக மேன்மை அடையக்கூடியவர்கள். உறவினர்களிடத்தில் அதிகமாக செல்வாக்கு உடையவர்கள்.

author avatar
Jayachithra