பெயிண்டர் உடன் உல்லாசம்!

0
98

சென்னையில் கள்ள தொடர்பினால் கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சென்னையில் உள்ள கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பவர் அருண். இவருக்கு வயது 30. இவரது மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் திருநாவுக்கரசு என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

 

அருண் எவ்வளவோ முறை சொல்லியும் இருவரும் கேட்க மறுத்துள்ளனர். அருண் கெஞ்சி கூட பார்த்தும் இருவரும் தங்கள் தொடர்பை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த அருண் திருநாவுக்கரசை தாக்க முயற்சித்தார். அருண் தனது உறவுக்காரரான சூர்யா என்பவருடன் திருநாவுக்கரசை பலமாக தாக்கி தலையில் வெட்டி உள்ளார்.இதனால் பயங்கரமாக காயமடைந்த திருநாவுக்கரசு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீசார் அருண் மற்றும் சூர்யாவை விசாரணை செய்து கைது செய்தனர். இந்நிலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் திருநாவுக்கரசு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.