கல்கி சாமியாருக்கு இவ்வளவு சொத்தா!

0
145

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வரத பாளையத்தில் கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தை கல்கி சாமியார் என்று கூறப்படும் விஜயகுமார் என்பவர் தலைமை தாங்கி நடத்தி வருகிறார் விஜயகுமார் விஷ்ணுவின் அவதாரம் என்றும் கூறி கொண்டு அவரை தேடி வரும் ஏராளமானோர்களுக்கு ஆசி வந்தார் இதில் அவருக்கு பணம் அதிகளவில் கிடைத்ததாகவும் அதை வைத்துதான் சித்தூரில் கல்கி ஆசிரமம் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்கி ஆசிரமம் பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாகவும் கட்டுமான தொழில் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஏராளமான முதலீடுகளை செய்யப்பட்டிருப்பதாகவும் வருமான வரித் துறைக்கு புகார்கள் வந்தன.

இதனடிப்படையில் வருமானவரித் துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கல்கி ஆசிரமம் சம்பந்தப்பட்ட 40 இடங்களில் சோதனை நடத்தியதில் 800 கோடி வருவாய் கணக்கில் காட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அம்பலமானது ஒன்னெஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருக்கும் இவர்கள் இங்கு சேவை செய்கின்றனர் இவர்களுக்கு சம்பளம் ஏதும் வழங்கப்படுவதில்லை உணவு மற்றும் தங்குமிடம் மட்டுமே வழங்கப்படும்.

இவர்கள் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள் என்ற காரணத்தால் இவர்கள் பெயரில் கல்கி சாமியார் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்தது. எந்தெந்த இடங்களில் பினாமி சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என கண்டறியப்பட்டு அவற்றை முடக்கம் செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.