Saturday, July 12, 2025
Home Blog

மகளிருக்கு ரூ 1500 உரிமைத்தொகை.. ஸ்டாலின் குட்டை உடைத்த எடப்பாடி!!

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கியது. அதிலும் பல வரைமுறைகளை அமல்படுத்தியிருந்தது. இதனால் பலருக்கும் உரிமை தொகை கிடைக்காமல் போனது.

நாளடைவில் இந்த திட்டத்தில் விரிவாக்கத்தை ஏற்படுத்தி சில தளர்வுகளை உண்டாக்கினர். தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு சலுகைகளை இத்திட்டத்தின் வழியாக கொடுத்துள்ளது. யாரெல்லாம் புதிய ரேஷன் அட்டையை விண்ணப்பிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இனி உரிமை தொகை கிடைக்கும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இது ரீதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்து பல அழுத்தங்களுக்கு பிறகு தான் மகளிர் உரிமைத் தொகையை நடைமுறைப்படுத்தியது. தற்போது வரை 75 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை.

நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் எண்ணாது?? இந்த ஆட்சியில் விவசாயிகள் பற்றி எந்த கவனமும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் மகளிருக்கு 1500 கொடுத்திருப்போம் என கூறினார். வரப்போகும் தேர்தலில் கட்டாயம் மகளிர் குறித்து உரிமைத் தொகை அதிகமாக வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

 

தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் 10 பவுன் நகையை திருடி விட்டதாக சொல்லி விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் அழைத்து சென்று எந்த வித வழக்கும் பதிவு செய்யாமல் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர்.

இதில் சம்மந்தப்பட்ட 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் வழக்கை CBI க்கு மாற்றிவிட்டனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே சந்தேகத்திற்கு உரிய வகையில் செயல்பட்ட நிகிதாவை இதுவரை யாரும் கைது செய்யவில்லை.

உண்மையில் நகை தான் காணாமல் போனதா, இல்லை அஜித் மீது இருந்த முன்விரோத பகை காரணமாக நகை காணாமல் போய்விட்டதாக சொல்லி அஜித்தை பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும் என்று நிகிதா செயல்பட்டாரா என்கிற கோணத்தில் இதுவரை காவல்துறையினர் விசாரிக்கவே இல்லை. ஊடகங்களில் சொல்லப்படும் நிகிதாவிற்கு உதவிய அந்த தலைமை செயலக அதிகாரி யார் என்றும் இதுவரை யாரும் விசாரிக்கவில்லை.

அஜித்குமார் இறப்பில் இருந்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நிகிதா இப்போது ரொம்ப கூலாக அமர்ந்து நியூஸ் சேனல்களுக்கு பேட்டி கொடுக்கிறார். ஒரு வேலை நிகிதாவை காவல் துறையினர் தேடிவருவது உண்மை என்ற போதிலும் காவல்துறையின் கையில் சிக்காத நிகிதாவை எப்படி ஊடக நிருபர்கள் சந்தித்து பேட்டி எடுக்க முடியும்.

நிகிதாவை காவல்துறையினர் கடைசி வரை விசாரிக்கவே இல்லையோ என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுகிறது. இந்நிலையில் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் அரசு கல்லூரிக்கு சென்று அனைவரையும் சந்தித்து விட்டு மீண்டும் தனது விடுமுறையை இன்னும் 20 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டி விண்ணப்பித்து விட்டு வந்திருக்கிறார் நிகிதா. நிகிதாவை கல்லூரியில் பார்த்த பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது மகனுக்காக உயிரை காப்பாற்றியவரை நடுத்தெருவில் துரத்தி விட்ட வைகோ!!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் எப்படி வாரிசுகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேலே கொண்டு வருவார்களோ அதேபோல அரசியலிலும் வாரிசுகள் முன்னுரிமை பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். திமுக ஸ்டாலின் உதயநிதி, பாமக ராமதாஸ் அன்புமணி, ஓபிஎஸ் அவருடைய மகன் ஓபி ரவீந்திரநாத் வரிசையில் வைகோவும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

வைகோ மகன் துரை வைகோ கட்சிக்குள் வந்தபிறகு அவரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தலைவர்களை மதிக்காமல் தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு பதவி கொடுப்பது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகிறார். வைகோவுடன் ஆரம்பம் முதலே பயணித்தவர் மல்லை சத்யா. இவர் தற்போது மதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

தற்போது தனக்கு துரோகி பட்டம் கொடுத்து தன்னை வெளியேற்றப்பார்க்கிறார் வைகோ என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மல்லை சத்யா. குடும்ப அரசியலை எதிர்த்து மதிமுகவை ஆரம்பித்த வைகோ இப்போது துரைவைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார். துரோகி பட்டம் கொடுத்து என்னை மதிமுகவில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள்.

வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என்று சொல்லும் அளவுக்கு வைகோ துணிந்து விட்டார். வாரிசு அரசியலுக்காகத்தான் என்னுடைய மகனுக்காகத்தான் இதை எல்லாம் செய்தேன் என்று வைகோ என்னை கட்சியை விட்டு துரத்தப்பார்ப்பது மனக்கவலை அளிப்பதாக பேட்டி கொடுத்துள்ளார் மல்லை சத்யா.

காவல்துறை அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி!! கோவையில் பதற்றம்!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கோவை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார். பழனிசாமி பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களும் அவருக்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர்.

கோவை வடக்கு டவுன்ஹால் அருகில் எடப்பாடி வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே ஏற்கனவே திமுக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட திமுக நிர்வாகிகள் அதிமுக பேனரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அங்கு வந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு பிரச்சனை பெருசானது.

பிரச்சனை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்துவந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரி SIயை திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்.

SIயை நோக்கி நீ என்ன பைத்தியக்காரனா? நீ என்ன ரௌடியா? உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன் என்று கோட்டை அப்பாஸ் திட்ட ஆரம்பித்தார். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி நேரடியாக திட்டிய சம்பவத்தால் அந்த இடத்தில் பதட்டம் அதிகரித்தது. சிறிது நேரம் திமுகவினர் அந்த இடத்திலேயே சாலை மறியல் செய்தனர். காவல்துறை அதிகாரியை திமுக நிர்வாகி ஒருமையில் கடுமையான வார்த்தைகளில் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அரசின் புதிய திட்டம்: வீடு வாங்க விருப்பமா? இப்போதே விண்ணப்பியுங்கள்!!

0

ஏழை மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.இந்த திட்டமானது  2015ஆம் ஆண்டில் பாஜக அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கொண்டு வீடு கட்டுவதற்கான மானியமாக ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். அதிலும் நிலம் கூட இல்லாதவர்கள் அரசால் கட்டப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் வீடுகளைக் வாங்கிக்கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி வீட்டு கடன்களுக்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

இதற்கடுத்து 2024ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS அதாவது (வருமானம் ரூ.3 லட்சம் வரை), LIG (ரூ.3-6 லட்சம்), மற்றும் MIG (ரூ.6-9 லட்சம்) வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் இந்த திட்டத்திற்கு விதவைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தனியாக வாழும் பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர், தெரு வியாபாரிகள், மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தான் முன்னுரிமை என்று கூறியுள்ளனர்.

எப்படி விண்ணப்பிப்பது??

விண்ணப்பிக்க விரும்புவோர் PMAY-U இணையதளத்தில் “Apply PMAY-U 2.0” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு தேவையான ஆவணங்களைத் தயார் செய்து, அதில் கேட்கும் தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

வங்கி கணக்கு விவரம்

வருமானச் சான்றிதழ்

நில ஆவணம் (இருப்பின்)

இவையனைத்தையும் வைத்து எளிதாக இந்த மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு கனவுக்கு நிதி உதவியாக இருக்கும்.

யாதும் அறியான் படத்தில் ரகசிய வேலை பார்த்த விஜய்.. 2026 யில் CM இவர் தான்!!

TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி மாநாட்டையும் நடத்தி முடித்து தனது கொள்கை எதிரி மதவாத எதிரி யார் என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் கூட ஒருபோதும் நாங்கள் பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இவர் சினிமாவை விட்டு முழுமூச்சாக அரசியலில் இறங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிலும் இவரது கடைசி படமாக ஜனநாயகன் உள்ளது. இப்படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கூறியுள்ளார். ஆனால் இவரைப் போல் வேறு எந்த கட்சியினரும் கூட்டணிக்காக இந்த சலுக்கையை கொடுத்ததில்லை. இவரின் வருகையை பாராட்டி சினிமா பிரபலங்கள் பலரும் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு கொடுத்துதான் வருகின்றனர்.

அந்த வகையில் செந்தூரா படத்தை எடுத்த இயக்குனர் தற்போது யாதும் அறியான் என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் 2024 மற்றும் 2026 யில் எடுக்கப்பட்ட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சி தான் தற்போது வைரலாகி உள்ளது. அதாவது 2026 யில் CM ஆக விஜய் இருப்பதாகவும், அதில் யாருக்கும் இனி இலவசம் என்பது கிடையாது எனக்கூறிய போஸ்டர் இடம்பெற்றுள்ளது. மேற்கொண்டு விவசாயிகளை முன்னிறுத்தி பல திட்டங்களை வைத்திருப்பது போலவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த காட்சியானது படத்தின் ட்ரைலரில் வைத்துள்ளதால் பெருமளவு வைரலாகி வருகிறது. விஜய் ஆட்சிக்கு வந்தாலும் இப்படித்தான் இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரியவைக்கவே இந்த போஸ்டர் என அவரது ஆதரவாளர்கள் கூறுவதோடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய்யின் மறைமுக உதவி இந்த படத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.

திமுக பக்கம் தாவும் ஜி கே மணி.. முக்கிய புள்ளியுடன் ரகசிய பேச்சு வார்த்தை!! கூட்டணிக்கு ரெடியான அன்புமணி!!

PMK: பாமக கட்சிக்கும் தலைமை பதவிக்கான மோதல் போக்கானது தற்போது வரை தீர்ந்தபாடில்லை. அப்பா மகன் இருவரும் தனித்தனியாக அறிக்கை விட்டு, நான் தான் தலைவர் எனக் கூறி வருகின்றனர். ஆனால் பாமக கட்சியின் உண்மையான தலைவர் யார் என்று தெரியவில்லை. இந்த கட்சியை ஆரம்ப கட்டத்திலிருந்து தலை தூக்க பாடுபட்டவர் ராமதாஸ் தான். அதனால் அவர் தான் தலைவர் என்று பலரும் வழி மொழிகின்றனர். அவர் பார்த்து அமர்த்தியவர்தான் அன்புமணி, எப்படி இப்போது வந்தவர் தலைவராகிட முடியும் என்றும் கேட்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் கட்சி இரண்டாகப் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. அதிலும் அன்புமணி கூறுவதாக, எனது அப்பாவுக்கு சில பேர் தங்களின் சுயநலத்துக்காக சொல்லிக் கொடுக்கின்றனர். அதேபோல திமுக தற்போது இவர் மீது கரிசனம் காட்டுகிறது. அவர் குழந்தை போன்றவர் என விமர்சனம் செய்திருந்தார். மேற்கொண்ட ஜிகே மணி தான் இவர்கள் பிரிவுக்கு காரணம் என்ற பேச்சும் கட்சிக்குள் இருந்து வருகிறது. ஆனால் அவரோ, இருவரும் ஒன்று சேர வேண்டுமென செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சமீபத்தில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைப்பது ரீதியாக மும்முரம் காட்டி வருகிறார். இதற்கு காரணம் ஜிகே மணி தான் என கூறுகின்றனர். நாம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த போது நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது பாஜகவுடன் கூட்டு வைத்து தான் தங்களுக்குறித்த பெயர் இல்லை. அதனால் மீண்டும் திமுக உடன் இணையலாம் என கூறுகிறாராம். மேற்கொண்டு திமுக முக்கிய அமைச்சர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறதாம். மற்றொரு பக்கம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அன்புமணி விரும்புவதாக கூறப்படுகிறது.

தேமுதிக பாமக கூட்டணியை அடித்து தூக்கும் விஜய்.. இதில் நீல அணியுடன் மறைமுக டீலிங் வேற!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதிலும் திமுக மட்டும் தான் தனது பழைய கூட்டணியை அப்படியே வைத்துள்ளது. மேற்கொண்டு பாஜக பாமக அதிமுக என மாற்றுக் காட்சியினர் தற்போது வரை கூட்டணி குறித்து குழப்பத்தில் தான் உள்ளனர்.

இதில் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் அது சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி முறை எனக் கூறி வருவதால் அதிமுக இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் இறுதிவரை கூட்டணி என்பது சற்று கடினம் தான் என கூறுகின்றனர். அதே சமயம் தேமுதிக பாமக இரு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாம்.

அதிமுகவுடன் தேமுதிக  கைகோர்த்திருந்த நிலையில் எம்பி சீட் வழங்காததால் மீண்டும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேசப்படவில்லை. இதனால் ஆட்சியில் பங்கு தரும் விஜய்யுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோலத் தான் பாமகவும்  விஜய்யுடன் சேர உள்ளதாம். முன்னதாகவே கட்சிக்குள் தலைமை பதவிக்கு சண்டை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ராமதாஸுக்கு அனைத்து அதிகாரமும் செல்லும் பட்சத்தில் அவர் விஜய்யுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி பல நாட்களாக ஸ்டாலினுடன் மன கசப்பிலிருக்கும் திருமா-வுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் உள்ளாராம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக பாமக விசிக என அனைவருடனும் கூட்டணி வைத்து ஸ்டாலினை எதிர்க்க போவதாக கூறுகின்றனர்.

மருமகளுக்கு எதிராக மகள்.. முக்கிய பதவியில் அமரப்போகும் காந்திமதி!! அன்புமணிக்கு ராமதாஸ் வைக்கும் செக்!!

PMK: பாமக கட்சியைக்குள் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் தற்போது ராமதாஸ் இருந்தாலும் அதனை அன்புமணி இருக்கவில்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணி இருவரும் தனி தனி நிர்வாகிகளை அமர்த்தியும் அதனை மற்றொருவர் நீக்கியும் வருகின்றனர். இதனால் கட்சியில் உள்ள பொறுப்புகளுக்கு யார் தான் நிர்வாகி என்ற குழப்பம் எழுந்துள்ளது.

அதாவது ராமதாஸ் நிர்வகிக்கும் நிர்வாகி செயல்படுவாரா அல்லது அன்புமணி நியமனம் செய்யும் நிர்வாகி செயல்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் ராமதாஸ் நியமனம் செய்த புதிய நிர்வாகிகளுடன் செயற்குழு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அவரது மூத்த மகள் காந்திமதியும் கலந்து கொண்டார். இவ்வாறு அவர் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வைத்து பொறுப்பு ஏதாவது வழங்கப் போகிறாரா என்று கேள்வியை செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டுள்ளனர்.

அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராமதாஸ் கூறியதாவது, தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஏற்கனவே அரசியலுக்குள் வந்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி மாநாட்டில் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்ததும் பெண்கள் தான். அந்த வகையில் காந்திமதிக்கு தற்போது வரை எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனக் கூறிவிட்டு, போகப்போக தெரியும் என்று பாடலை பாடினார். இதற்குப் பின்னால் கட்டாயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் என்பது தெரிகிறது.

அன்புமணியின் மனைவிக்கு எதிராக தனது மகளை களத்தில் இறக்க ராமதாஸ் தயார் செய்வதாகவும் வரப்போகும் தேர்தலில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது பதிவு செய்யப்பட்ட இந்த புகாரில் தொழிலதிபர் பாணிந்திரா சர்மா என்பவர் இந்த ஆன்லைன் சூதாட்டம் குறித்து புகார் அளித்தார்.

அவரது புகாரின்படி, இந்த சூதாட்ட பயன்பாடுகள் மூலம் பெரும் அளவில் பணம் பரிவர்த்தனையாகும். இதனால் மத்திய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் நிதிப் பிரச்சனையில் சிக்கிக்கொண்டுள்ளன.

பிரபலங்கள் மூலம் சட்டவிரோத விளம்பரங்கள்?

இந்த பிரபலங்கள், சமூக ஊடகங்களில் இத்தகைய சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தி, சட்டவிரோத சூதாட்டங்களை ஊக்குவித்து வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பிரபலமான இவர்கள், தனிப்பட்ட நலனுக்காகவே இத்தகைய செயலிகளுக்கு பணம் வாங்கி ஆதரவாக செயல்பட்டதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணமே பிரதானக் காரணமா?

அமலாக்கத் துறை இந்த வழக்கை பணம் சம்பந்தமான மோசடிகளை தடுக்கும் சட்டமான (PMLA) Prevention of Money Laundering Act சட்டத்தின் கீழ் விசாரிக்கிறது. இந்நிலையில், ED தற்போது ECIR (Enforcement Case Information Report) பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

ED அடையாளம் காட்டிய 29 பிரபலங்கள் யார் யார்?

தெலுங்கு சினிமா, தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் பிரபலம் ஆகியவர்களின் பட்டியல்:

1. ராணா டக்குபதி

2. விஜய் தேவராகொண்டா

3. பிரகாஷ் ராஜ்

4. மஞ்சு லட்சுமி

5. பிரணிதா சுபாஷ்

6. நிதி அகர்வால்

7. அனன்யா நாகல்லா

8. சிரி ஹனுமாந்த்

9. ஸ்ரீமுகி

10. வர்ஷினி சௌந்தரராஜன்

11. வசந்தி கிருஷ்ணன்

12. ஷோபா ஷெட்டி

13. அம்ருதா சௌதரி

14. நயனி பவானி

15. நேஹா பாதான்16. பாண்டு

17. பத்மாவதி

18. இம்ரான் கான்

19. விஷ்ணு பிரியா

20. ஹர்ஷா சாய்

21. பையா சன்னி யாதவ்

22. ஷ்யாமளா

23. டேஸ்டி தேஜா

24. ரீது சௌதரி

25. பண்டாரு சேஷயனி சுப்ரீதா

மேலும், செயலியின் மேலாண்மை மற்றும் இயக்கத்தில் தொடர்புடையவர்கள்:

26. சூதாட்ட செயலியின் இயக்குனர்கள்

27. கிரண் கவுத்

28. அஜய், சன்னி, சுதீர் என்ற சமூக ஊடக பாதிப்பாளர்கள்

29. Local Boy Nani என்ற யூட்யூப் சேனல்

விசாரணை:

இந்நிலையில், இவர்கள் அனைவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று ED தரப்பில் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை, மஹாதேவ் செயலியைச் சுற்றியுள்ள பல்வேறு விசாரணைகளின் தொடர்ச்சியாகவே வரும்.

அரசியல், திரைப்படம், இணைய பிரபலங்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களை இந்த விசாரணை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த வழக்கின் முடிவுகள் இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது நிச்சயம்.