Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், திமுகவிற்கு ஓட்டம்!

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலுள்ள நிர்வாகிகளான டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் திமுகவில் இணைந்து உள்ளனர்.

 

மேலும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்த் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ளனர்.

 

மக்கள் நீதி மையத்தின் கட்சியிலிருந்து ஒவ்வொருத்தராக விலகி இருக்கும் நிலையில் மறுபடியும் மக்கள் நீதி மையத்தின் பொது செயலாளரான கமலஹாசன் அவர்கள் மேலும் பல நிர்வாகிகளை நியமித்தார்.

 

இந்நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் மற்றும் பத்ம பிரியா ஆகியோர் ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்து மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version