Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

#image_title

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

மத்திய அரசின் பல திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் உள்ள நிலையில் குறிப்பாக பிரதான் மந்திரி வய வந்தானா யோஜனா திட்டமானது அதிக அளவு பயனை அளிக்கிறது.

இந்தியாவில் பலவகையான ஓய்வூதிய திட்டங்கள் இருந்தாலும் அதனை காட்டிலும் இதில் அதிக அளவு நன்மைகளை பெற முடிகிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியால் இதன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் நாளடைவில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

60 வயதை கடந்த அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து அதில் உள்ள நண்பர்களைப் பெறலாம். இந்த திட்டத்தில் இணைந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்பு தான் கடன் போன்றவற்றை இதன் மூலம் வாங்க முடியும். மூத்த குடிமக்கள் தங்களுக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால் ரூ1.62 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டும்.

இதுவே மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஓய்வூதியம் பெறுவதற்கு 1.61 லட்சமாக முதலீடு செய்ய வேண்டும். இதே போல ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு ஒரு முறை ஓய்வூதியும் பெற விரும்ப அவர்கள் அதற்கேற்ற தொகையை முதலீடு செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி இந்த பத்து வருட பாலிசி முடியும் வரை முதலீட்டாளர்கள் உயிரோடு இருக்கும் நிலையில் அவர்களுக்கு கடைசி தவணை ஓய்வூதியத்துடன் முதலீடு செய்த பணமும் சேர்த்து வழங்கப்படும். இதுவே உயிரிழந்திருப்பின் அவர் நாமினியிடம் அவர் முதலீட்டு செய்த பணம் வழங்கப்படும்.

Exit mobile version