உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

0
105
1 rupee coin remedy that will make you a millionaire!! 100% effective!!

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

இன்றைய காலத்தில் வாழக்கையை கடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.சம்பாதிக்கும் பணம் சாப்பாடு,மருத்துவ செலவுக்கே சரியாக இருப்பதால் எங்கிருந்து சேமிக்கிறது என்ற ஆதங்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது.

சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பு இருந்தால் தான் அவசரத் தேவைக்கு கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சமாளிக்க முடியும்.ஆனால் சேமிக்கவே முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் வீட்டில் செல்வம் பெருகி உங்களை கோடீஸ்வரான
மாற்றும்.

வீட்டில் செல்வ வளம் பெருக லட்சுமி கடாச்சம் வீட்டில் நிறைந்து இருக்க வேண்டும்.இதற்கு சில வழிகளை மேற்கொள்வது அவசியம்.

கோடீஸ்வர யோகம் பெற 5 பொருட்களை வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

*பச்சை கற்பூரம்

*ஏலக்காய்

*கண்ணாடி பவுல்

*கல் உப்பு

*1 ரூபாய் நாணயம்

அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு,வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் ஒரு கண்ணாடி பவுல் எடுத்து அதில் கல் உப்பு நிரப்பி கொள்ளவும்.பின்னர் அதில் 1 ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளவும்.அதனுடன் 1 ஏலக்காய் மற்றும் சிறு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து வைக்கவும்.அடுத்து ஒரு அகல் விளக்கில்எண்ணெய் ஊற்றில் தீபம் போடவும்.பின்னர் மகா லட்சுமி தாயாரை மனதில் நினைத்து செல்வ வளம் பெருக வேண்டும்,கோடீஸ்வர யோகம் கிடைக்க வேண்டுமென்று நினைத்து உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.தினமும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு இந்த வழிபாட்டை மேற்கொண்டால் விரைவில் கோடீஸ்வரர் ஆவதற்கான யோகம் கிடைக்கும்.