தமிழ்நாடு ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு எழுதிய திடீர் கடிதம்! என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு!

0
104

பதினோராம் வகுப்பு மாணவர்களின் மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் இன்றிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளருடன் பள்ளிக்கல்வித் துறை ஆணையருக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.

அதில் தலைமை ஆசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் வரையில் 14ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை தரவேண்டும் எனவும், பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாடப்புத்தகம் கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் தெளிவான நிலை இல்லை. அதோடு பெற்றோர் மற்றும் மாணவர்கள் நிலையில் இது தொடர்பாக குழப்பங்கள் நீடித்து வருகிறது.

ஊரடங்கு உதாரணமாக பொது போக்குவரத்து இதுவரையில் ஆரம்பிக்கப்படவில்லை தலைமையாசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அதிகளவில் பெண்களாக இருந்து வருகிறார்கள். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் சிரமமாக இருக்கிறது அதோடு மாணவர்கள் சேர்க்கை ஆசிரியர்கள் எல்லோரும் இருந்தே கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது தான் வழக்கம். தற்சமயம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு இயலாத நிலை இருந்து வருகிறது. அதனை போலவே மாணவர்கள் தங்களுடைய பெற்றோரும் போக்குவரத்து எதுவும் இல்லாமல் பள்ளிக்கு வந்து செல்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மாணவர்களுக்கான மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டி இருக்கிறது. இந்தப் பணிகளில் எந்தவிதமான பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக நடைபெற வேண்டுமென்றால் நோய்த்தொற்று குறைந்து ஊரடங்கும் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் அதன் பின்னர் மாணவர் சேர்க்கை நடத்துவது நான் எல்லோருக்கும் நல்லது இதன் காரணமாக நோய்த் தொற்று குறைந்து ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இருந்து வரும் அச்சத்தை போக்கி அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.