Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

Two-wheeler collide head-on accident! One victim!

Two-wheeler collide head-on accident! One victim!

இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து! ஒருவர் பலி!

சேலம் மாவட்டம் எடப்பாடி சித்தூர் மேல் காடு பகுதியை சேர்ந்தவர் செளிய கவுண்டர்.இவருடைய மகன் சேட்டு(24).இவர் அவருடைய சொந்த வேலையாக நேற்று மாலை பைக்கில் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் பகுதியில் 4ரோடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வட மாநில வாலிபர் வந்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய இருசக்கர வாகனம் சேட்டு சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது.அப்போது சேட்டு நிலை தடுமாறி கிழே விழுந்தார்.

அந்த நேரத்தில் அவருடைய பின்னால் வந்த லாரியின் பக்கவாட்டு சக்கரத்தில் தலை சிக்கியது.மேலும் அவர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் கூறினார்.மேலும் இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version