விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

0
117

விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் மரணம்:! கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்!!

விவேகானந்தர் சேவாலயம் நடத்தும் விவேகானந்தர் விடுதியில் 3 குழந்தைகள் உயிரிழப்பு. 5 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதி.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தர் சேவாலையும் நடத்தும் குழந்தைகள் விடுதி இயங்கிவருகிறது.அந்த விடுதியில் கெட்டுப்போன உணவினை சாப்பிட்டதால் 10 வயது முதல் 13 வயதுடைய மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் வயிறு உபாதையால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூன்று குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் விடுதிக்காப்பாளர்,நிர்வாகத்தினர் இடையே காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.