Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

#image_title

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது

7 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாளம் பகுதியை சேர்ந்த தேஜா குப்தா என்ற ஏழு வயது சிறுவன் நேற்று இரவு பெரிய மேடு மைலேடிஸ் பார்க் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பெரிய மேடு போலீசார் அஜாரக்ரதையாக செயல்பட்டு பிறருக்கு மரணம் விளைவித்தல் (304 -A) என்ற பிரிவின் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நீச்சல் பயிற்சியாளர்களான திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(37), திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சுமன் (31), Life Guard ஊழியரான திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார்(25) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து பெரிய மேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version