டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் 4 வகை தேநீர்!! 100% பலன் உண்டு!!

0
123
#image_title

டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் 4 வகை தேநீர்!! 100% பலன் உண்டு!!

டெங்கு காய்ச்சல்:-

மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும்.

டெங்கு அறிகுறிகள்:-

*திடீரென கடுமையான காய்ச்சல்

*அதிகமான தலைவலி

*கண்களுக்கு பின்புறம் வலி

*உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்

*உடல் வலி

*கண் விழி சிவத்தல்

*வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண் கூசுதல்

டெங்கு காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது.

டெங்கு காய்ச்சலை குணமாக்கும் தேநீர் வகைகள்:-

1)கொய்யா இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை – 3

*பனங்கற்கண்டு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். பின்னர் 3 கொய்யா இலைகளை சுத்தம் செய்து அதில் கிள்ளி போட்டு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதில் சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கலந்து பருகவும்.

இந்த கொய்யா இலையில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதினால் அவை டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.

2)பிரியாணி இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*பிரியாணி இலை – 2

*தேன் – சில துளிகள்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அவை சூடானதும் அதில் 2 பிரியாணி இலை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் சுவைக்காக சில துளி தேன் சேர்த்து கலந்து பருகினால் டெங்கு ஜுரத்தின் தாக்கம் குறையும்.

3)பப்பாளி இலை தேநீர்

தேவையான பொருட்கள்:-

*பப்பாளி இலை – 1/4 கப் (நறுக்கியது)

*பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள பப்பாளி இலையை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். இவை இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளை அதிகரிக்க உதவுகிறது.

4)நிலவேம்பு தேநீர்

தேவையான பொருட்கள்:-

*நிலவேம்பு – சிறிதளவு

செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும். பின்னர் அதில் சிறிதளவு நிலவேம்பு இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இதை வடிகட்டி பருகினால் டெங்கு காய்ச்சல் விரைவில் சரியாகும்.