Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குட் நியூஸ்! தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி… முழு விவரம் உள்ளே!

நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிறப்பு ரயில் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட வருகிறன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எழும்புர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 39 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்கள் இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் தமிழகத்திற்குள் 7 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள்:

மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version