Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு: கைதாக வாய்ப்பா?

நடிகை ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை ஒருவரும், நடன இயக்குனர் ஒருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பல பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடன இயக்குனர் ராகேஷ் மற்றும் துணை நடிகை கராத்தே கல்யாணி ஆகிய இருவரையும் சம்பந்தப்படுத்தி ஆபாசமாக சில கருத்துக்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ ஆதாரங்களை சேகரித்து துணை நடிகை கராத்தே கல்யாணி இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இந்த வீடியோ ஆதாரங்களை பார்த்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவார் என்று கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Exit mobile version