Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

#image_title

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். இதையடுத்து முதல்வரை வரவேற்க திமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.

இதையடுத்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பொருளாதாரமானது மேம்பாடு அடையும் வகையில் இந்த பயணம் அமைந்தது. தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடத்தை பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “3000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கு திட்டம் இட்டோம். நினைத்ததை விட 3233 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்” என்று கூறினார்.

 

Exit mobile version