ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

0
245
#image_title

ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்! கூட்டம் அலை மோதியதால் ஹோட்டலை மூடிய போலிஸ்!!

 

திருப்பதியில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்த ஹோட்டல் முன்பு பிரியாணி வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதியதால் காவல் துறையினர் ஹோட்டலை மூடினர்.

 

தெலுங்கானா மாநிலம் திருப்பதியில் கரீம் நகரில் ஹோட்டல் ஒன்று புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு 1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. பிரியாணி வங்க வருபவர்கள் கண்டிப்பாக ஒரு ரூபாய் நாணயம் கொண்டு வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு நபருக்கு ஒரு பிரியாணி என்ற நிபந்தனையையும் ஹோட்டல் நிர்வாகம் முன்வைத்தது.

 

இந்த விளம்பரத்தை பார்த்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பிரியாணியை வாங்கி சாப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டு ஹோட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் ஹோட்டல் முன்பு காத்திருந்தனர்.

 

இந்த ஒரு ரூபாய் பிரியாணி தகவல் வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியதால் கூட்டம் அதிகரித்தது. பிரியாணி வாங்க வருபவர்கள் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு பிரியாணி வாங்க வந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

பிரியாணி வழங்கும் பொழுது எப்படியாவது ஒரு ரூபாய் பிரியாணி வாங்கிவிட வேண்டும் என்று வாலிபர்கள் ஒருவரை ஒருவரை இடித்துக் கொண்டு முண்டியடித்து செல்ல முயன்றனர். ஒரு சிலர் பிரியாணியை வாங்கி விட வேண்டும் என்று கூட்டத்தில் முண்டியடித்து ஹோட்டலுக்குள் சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரர்களிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர்.

 

நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போக ஹோட்டல் உரிமையாளர் காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றும் கூட்டத்தை காவலர்களால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதையடுத்து காவல் துறையினர் ஹோட்டலை தற்காலிகமாக இழுத்து மூடிய நிலையில் பிரியாணி வங்க வந்தவர்கள் அனைவரும் பெரிய ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.