ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

0
154
A psycho who attacked the student with one head love !!

ஒரு தலை காதலால் மாணவியை சரமாரியாக தாக்கிய சைக்கோ !!

புதுச்சேரி சன்னியாசிக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் கீர்த்தனா வயது 18. இவர் கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இதனிடையே கீர்த்தனாவை அவரது உறவினரான முகேஷ் வயது 22 என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு கீர்த்தனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும்  முகேஷ் அடிக்கடி கீர்த்தனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

தன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்றும் தன்னை மட்டும் திருமணம் செய்ய வேண்டும் என்று மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. எதையும் கண்டுகொள்ளாத கீர்த்தனா நேற்று மாலை கல்லூரி முடித்த பிறகு தனியார் பேருந்தில் சன்னியாசிக்குப்பம் இறங்கியுள்ளார்.

தன் வீட்டிற்கு செல்வதற்காக கடைவீதியில் நடந்து சென்றுள்ளார்.அப்போது முகேஷ் கத்தியுடன் அவரை தாக்க மறைந்திருந்தார். திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை,கால் என சில பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றார்.

இதில் கீர்த்தனா இரத்தவெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து கீர்த்தனாவை மீட்டு மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சிகிச்சையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தக் கொலையில் ஈடுபட்ட முகேஷ்சை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இப்படிப்பட்ட சைக்கோவை வெளியில் விட்டு வைக்கவே கூடாதென பொதுமக்கள் கூறியுள்ளார்கள்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.