பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

0
168

பெண்ணுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கட்டி போட்ட சைக்கோ? வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயதுடைய மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் டெல்லியில் வேலை பார்த்து வருவதால் தனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தன் எட்டு வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தன் குழந்தையும் அப்பெண்ணும் உறங்கியுள்ளனர். சிறிது நேரம் கழித்து வெளியே யாரோ ஒருவர் தன் வீட்டு கதவை தட்டினார். கணவன் தான் வந்திருப்பார் என்று அப்பபெண்ணும் கதவை திறந்துள்ளார். வந்தவர் அப்பெண்ணின் கணவன் அல்ல அவன் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு இருந்ததால் அடையாளம் தெரியாமல் போனது.

வீட்டின் உள்ளே நுழைந்த மர்மம் தெரியாத நபர் திடீரென்று அப்பெண்ணின் கை கால்கள் இரண்டையும் கைரால் இறுக்கமாக கட்டி விட்டார். மேலும் பெண்ணின் கண்களில் ஒரு குச்சியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். அப்பெண்ணும் அவரது குழந்தையின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வீட்டில் உள்ளே வந்து பார்க்கையில் அவர் கண்களில் ரத்தம் சொட்ட சொட்ட கீழே மயங்கி கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சில மணி நேர விசாரணையில் எம்.டி சமீம் என்பவரை கைது செய்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.யாரும் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து இச் செயலை செய்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.