Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை!

#image_title

உங்களுக்காக சூப்பர் பேஸ் மாஸ்க்! பார்லரே தேவையில்லை!

நம் அன்றாட வாழ்வில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒன்று இந்த தயிர்.இந்த தயிரை மல்டி விட்டமின் உணவு என்று சொல்லப்படுகிறது.தயிரில் விட்டமின் மற்றும் புரோட்டின் அதிக அளவு உள்ளது. இதில் முக்கியமாக விட்டமின் டி இருக்கிறது.

இந்த விட்டமின் டி உங்கள் முகத்தின் காம்ப்ளக்ஸை பொலிவு படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உங்கள் முகத்தை மிகவும் சாப்ட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதற்கு மிகவும் முக்கியமானது தயிர் அதனுடன் கஸ்தூரி மஞ்சள் ஒரு ஸ்பூன், ஒன்றரை ஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறு, இந்த மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பிறகு முகத்தை நன்கு தண்ணீரில் கழுவி விட்டு நாம் கலந்து வைத்திருந்த இந்த மூன்றையும் முகத்தில் அனைத்து இடத்திலும் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும்.

தயிரில் லாக்டிக் ஆசிட் இருப்பதால் நம் முகத்தில் உள்ள கரு வளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை மறைய செய்ய உதவுகிறது.மேலும் இதில் சேர்த்துள்ள கஸ்தூரி மஞ்சளில் பாக்டீரியாவை அழிக்கு தன்மை உள்ளது. இது நம் முகத்தில் கொப்பளங்கள் வராமல் பாதுகாக்கிறது.

இதில் சேர்த்துள்ள எலுமிச்சம் பழத்தில் சிட்ரிக் ஆசிட் உள்ளது. இது நம் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.இதனை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து சோப் எதுவும் பயன்படுத்தாமல் முகத்தை கழுவி விட வேண்டும் .

இந்த மாஸ்கை வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை பயன்படுத்தலாம். மேலும் இதனை இரவு தூங்கும் போது முகத்தில் இதனை தடவிக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் எழுந்து முகத்தை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மாதங்கள் செய்து வர முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகி உங்கள் முகம் மிகவும் அழகானதாக மாறிவிடும்.

Exit mobile version