Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!!

#image_title

17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!!

மும்பையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்க 17 மணிநேரம் வரிசையில் நின்று இளைஞர் ஒருவர் முதல் ஐபோன் 15-ஐ வாங்கி சாதனை படைத்துள்ளார். மேலும் இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மாட்போன்களின் வரிசையில் ஐபோன் 15 நேற்று(செப்டம்பர்22) முதல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லி, மும்பை ஆகிய பெரு நகரங்களில் நேற்று(செப்டம்பர் 22) முதல் விற்பனை தொடங்கியது.

இதையடுத்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15-ஐ வாங்குவதற்கு செப்டம்பர் 22ம் தேதிக்கு முன்தினம் முதலே ஐபோன் விற்பனை செய்யப்படும் இடங்களில் குவியத் தொடங்கினர். குறிப்பாக மும்பையில் ஐபோன் 15 விற்பனை செய்யப்படவிருந்த பாந்த்ரா குர்லா விற்பனை வளாகத்தில் உள்ள ஆப்பிள் ஐ போன் ஸ்டோர் முன்பாக ஆயிரக் கணக்கான மக்கள் குவிந்தனர்.

இவர்கள் அனைவரும் தங்களது வரிசையில் நின்று காத்திருந்தனர். இவர்களில் முதல் ஐ பின் 15-ஐ வாங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த வகையில் அஹமதாபாத்தை சேர்ந்த ஒரு வாலிபர் 17 மணிநேரம் வரிசையில் காத்திருந்து இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து அந்த வாலிபர் “நான் நேற்று(செப்டம்பர்21) மதியம் 3 மணி முதல் இங்கு வரிசையில் காத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஐபோன் ஸ்டோரில் முதல் ஐபோனை பெறுவதற்காக 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தேன். நான் அகமதாபாத்தில் இருந்து முதல் ஐபோனை வாங்க வேண்டும் என்பதற்காக மும்பை வந்துள்ளேன். முதல் நாளில் அதிலும் முதல் ஐபோனை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version