Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது!!

#image_title

பெரவள்ளூரில் டம்மி துப்பாக்கி வைத்து ஆட்டோ ஓட்டு நரை மிரட்டிய வாலிபர் கைது.

சென்னை, பெரவள் ளூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்று இரவு பியூலா என்ற நபரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பெரவள்ளூர் நோக்கி வந்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டணமாக ரூ.80 கேட்டுள்ளார்.

அதற்கு பியூலா ரூ.50 தான் தரமுடியும் என்று ஆட்டோ ஓட் டுனரிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் பியூலா தனது மகன் ஜோசப்புக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அப்போது மதுபோதையில் வந்த ஜோசப் ஆட்டோ ஓட் டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஜோசப் தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன்னை எடுத்து ஆட்டோ டிரைவரை சுட் டுவிடுவேன் என்று மிரட் டியுள்ளார்.

துப்பாக்கியை பார்த்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் குமார் சத்தம் போட்டுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோசப்பை காவல்நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பிடிபட்ட ஜோசப் பாஜ வில் கல்வி வளர்ச்சி பிரிவு நிர்வாகியாக ஏற்கனவே இருந்துள்ளார்..

Exit mobile version