Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆடி மாத பவுர்ணமி விரதத்தால் கிடைக்கும் முக்கிய பயன்கள்!

தமிழ் மாதங்களில் பல சிறப்புகள் கொண்ட ஒரு அற்புதமான மாதமாக ஆடி மாதம் விளங்கி வருகிறது. இந்த ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களுக்கான வழிபாடுகள் மற்றும் பூசைகள் போன்றவை மிகச் சிறப்பாக செய்யப்படும். தெய்வங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் இந்த ஆடி மாதத்தில் திருமணம், புதுவீடு புகுதல், போன்ற சுப காரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இதைப்போன்ற ஆடி மாதத்தில் வருகின்ற ஒரு மிக முக்கியமான தினம்தான் ஆடி பவுர்ணமி தினம். மிகச்சிறப்பான தினமான ஆடிப் பவுர்ணமி தினத்தில் அம்மன் வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மிக அற்புதமான மாற்றங்கள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

ஆடி மாதப் பவுர்ணமி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவு உண்ணாமல் வீட்டின் பூஜை அறையில் அம்மன் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கின்ற அம்மன் அல்லது அம்பாள் கோவிலுக்கு சென்று அம்மன் அல்லது அம்பாள் தெய்வங்களுக்கு சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சார்த்தி சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்தல் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

பலவிதமான வாசமிக்க பூக்களால் அர்ச்சனை செய்வதோ உடன் அருகம்புல்லால் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. அதோடு ஆடி பவுர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து வாழைப்பழம் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிகவும் அற்புதமான பலன்களை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு பூஜை முடிந்தபின்னர் நெய்வைத்தியம் செய்த பிரசாதத்தையும், தயிர்சாதம், சாம்பார் சாதம், போன்றவற்றையும் கோவிலில் இருக்கின்ற பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கவேண்டும். அம்மனை மேலே சொல்லப்பட்ட வழியில் வழிபடுவர்களுக்கு மிகுதியான புண்ணிய பலன்கள் கிடைக்கும். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் ஒட்டுமொத்தமாக விலகி லாபங்கள் பெருகும், நோய் நொடிகள் ஏற்படாமல் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். துர்மரணங்கள் ஏற்படுவதை தடுக்கும் அதோடு இந்த ஆடி பவுர்ணமி தினத்தில் வேதம் அறிந்த பிராமணர்களுக்கு புது வஸ்திரம் மற்றும் உங்களால் இயன்ற தொகையை தட்சணையாக தானம் கொடுப்பது உங்களுடைய அத்தனை விதமான தோஷங்களையும் போக்குகின்ற ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது

Exit mobile version