Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!!

#image_title

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாத கணக்குகள்! கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கூகுள் நிறுவனம் தெடர்பான கணக்குகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக  தகவல்  வெளியாகியுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கும் கூகுள் நிறுவனம் பில்லியன் கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இந்த கூகுள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளான ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ் ஆகிய கணக்குகளை நீக்கவுள்ளது.
இதையடுத்து இந்த கணக்குகளில் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், கோப்புகள் அனைத்தும் அழிந்துவிடும். இந்த பயன்படுத்தப்படாத கணக்குகள் அனைத்தும் 2023ம் ஆண்டுக்குள் நீக்க கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதனால் ஹேக் போன்ற அச்சுறுத்தல்களை தடுக்கலாம் என கூகுள் அறிவித்துள்ளது.
Exit mobile version