நடிகர் அஜித்தும் என்னுடைய மகன் தான்! விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் பேட்டி!

0
341
#image_title

நடிகர் விஜய் அவர்களின் தாயாரான சோபா சந்திரசேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்களும் என்னுடைய மகன் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் கடந்த சில காலமாக சில பேட்டிகளை அளித்து வருகின்றார். இந்த பேட்டிகள் அனைத்தும் கவனம் பெற்று இணையத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்நிலையில் தற்பொழுதும் கவனிக்கத்தக்க பேட்டி ஒன்றை அளித்து மீண்டும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி இருக்கிறார்.

நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திர சேகர் அவர்கள் பல திரைப்படங்களில் பாடல் படியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் “என்னுடைய மகன் நடிகர் விஜய் அவர்களும் நடிகர் அஜித் அவர்களும் இணைந்து ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் நடித்தனர். அந்த நேரத்தில் நான் விஜய்க்கும் நடிகர் அஜித் அவர்களுக்கும் சேர்த்து தான் சாப்பாடு செய்து கொடுத்து விடுவேன்.

இது குறித்து நடிகர் அஜித் அவர்கள் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் அவர்களின் தாயார் விஜய்க்கு மட்டுமில்லாமல் எனக்கும் சேர்த்து தான் உணவு சமைத்து கொடுத்து விடுவார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியிருந்தார். நடிகர் அஜித் அவர்கள் அப்படி பேசுவார் என்று நான் எதிர்பார்த்தது கிடையாது. இது எனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நடிகர் விஜய் போல நடிகர் அஜித் அவர்களும் என்னுடைய மகன் தான்” என்று சோபா சந்திரசேகர் அவர்கள் கூறியுள்ளார்.