Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்

மணிரத்னம் இயக்கத்தில் லைக்காவின் தயாரிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தாய்லாந்து நாட்டின் காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். விரைவில் விக்ரம் இந்த படத்திம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அவ்வப்போது புதிய நடிகர்கள் இணைந்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் லேட்டஸ்டாக இந்த படத்தில் இணைந்திருப்பவர் மோகன் ராமன் என்ற நகைச்சுவை நடிகர். இவர் என்ற படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கடியான் என்ற கேரக்டர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மோகன்ராமுக்கு என் மிகப்பெரிய கேரக்டரை மணிரத்னம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பூங்குழலி கேரக்டரில் ஐஸ்வர்யா லட்சுமி, சுந்தரசோழர் கேரக்டரில் சரத்குமார், குந்தவை கேரக்டரில் த்ரிஷா மற்றும் பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், லால், அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version