ஒத்த வீடியோ….மொத்தமும் காலி…நடிகர் சந்தானத்தை வெச்சி செய்யும் நெட்டிசன்கள்…!

0
142

தமிழ் சினிமாவில் நகைச்சுவையாக நடிகராக அறிமுகமாகி பல படங்களில் கலக்கிய சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஒரு வீடியோவால் இணையவாசிகள் வெறுப்பை அதிகமாக சம்பாதித்து இருக்கிறார். சமீபத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்த இவர், கொஞ்சம் ஓய்வெடுக்க சுற்றுலா சென்று இருக்கிறார். இவர் சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு புலியை கண்டிருக்கிறார், அப்போது அந்த புலியின் வாலை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவுடன் சேர்த்து, ‘இதுக்கு பேருதான் புலி வாலை பிடிக்கிறதா’ என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த வீடியோ விலங்குகளை துன்புறுத்தும் விதமாக இருக்கிறது, இதற்கு சந்தானம் ஆதரவு தெரிவிக்கிறார் என கூறி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது அந்த வீடியோவில் சந்தானம் புலியின் அருகில் இருக்கும்போது ஒருவர் குச்சியால் அந்த புலியின் தலையில் அடிக்கிறார், அப்போது சந்தானம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

இப்படி வாயில்லா ஜீவனான புலியை மற்றொருவர் அடிக்கும்போது சந்தானம் எதுவும் செய்யாததால் இவ்வாறு மிருகங்களை துன்புறுத்துவதை ஆதரிக்கிறார் என்றும் இந்த வீடியோவை உடனே டெலீட் செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால் சந்தானம் அந்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்து டெலீட் செய்யவில்லை, இதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.