Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

போண்டா மணியின் உடல்நிலைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்… வடிவேலு அளித்த பதில்!

நடிகர் போண்டாமணி சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் சென்னை ஓமாந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் வடிவேலுவோடு இணைந்து மறக்க இயலாத பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்தவர் போண்டா மணி. வடிவேலு மட்டும் இல்லாமல் கவுண்டமணி, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சையில் குணமான அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இப்போது அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக அவரின் சக நடிகர் பெஞ்சமின் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல் ஆனது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் அவரை சந்தித்து முழு செலவையும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்றுக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபாடு செய்யவந்த வடிவேலுவிடம் போண்டாமணியின் உடல் நிலை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது வடிவேலு “நல்ல பையன். என்னால முடிந்த உதவிய நான் அவருக்கு செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த நடிகரான போண்டாமணி தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சினிமா வாய்ப்புகளுக்காக உழைத்து 1991 ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தில் பாக்யராஜோடு நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் கதாபாத்திரம் பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version